IND vs AUS 3rd ODI | ரசிகர்களுக்கு இலவச சிற்றுந்து வசதி: சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம்

கோப்புப்படம்
கோப்புப்படம்
Updated on
1 min read

சென்னை: இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி நாளை (புதன்கிழமை) சென்னை - சேப்பாக்கத்தில் உள்ள கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்நிலையில், இந்தப் போட்டியை காண வரும் பார்வையாளர்களுக்காக இலவச சிற்றுந்து வசதியை ஏற்பாடு செய்துள்ளது சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம். இதுதொடர்பாக வெளியாகி உள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது.

இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான ஒருநாள் கிரிக்கெட் போட்டி சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நாளை நடைபெறவுள்ளது . இந்த போட்டியை காண ஏராளமான கிரிக்கெட் ரசிகர்கள் வருகை தருவார்கள். இதற்காகவே சென்னை மெட்ரோ ரயில் நிலையமான அரசினர் தோட்டம் முதல் சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானம் வரை இலவசமாக சிற்றுந்து சேவை வசதியை நாளை காலை 11:00 மணி முதல் கிரிக்கெட் போட்டி முடியும் வரை கிரிக்கெட் ரசிகர்களுக்காகவே செய்துள்ளது.

மேலும், நாளை (மார்ச் 22) மட்டும் மெட்ரோ ரயில் சேவை நெரிசல்மிகு நேரமான மாலை 5:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை உள்ள நெரிசல்மிகு நேரத்தை இரவு 10:00 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இந்த தருணத்தில், சென்னை மெட்ரோ ரயில் வாகன நிறுத்தும் இடங்களை பயன்படுத்திக்கொள்ளலாம். சென்னை பெருநகர மக்களும், கிரிக்கெட் ரசிகர்களும், பொதுமக்களும், மெட்ரோ ரயில் நிர்வாகம் செய்துள்ள இந்த வசதிகளை பயன்படுத்தி கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in