Published : 09 Mar 2023 05:22 AM
Last Updated : 09 Mar 2023 05:22 AM

விளையாட்டுத் துளிகள் - சென்னையின் எப்சி-யில் இருந்து ஷபிர் பாஷா விலகல்

ஷபிர் பாஷா விலகல்: ஐஎஸ்எல் கால்பந்து தொடரில் சென்னையின் எப்சி அணியின் துணை பயிற்சியாளராக நீண்டகாலமாக பணியாற்றி வந்த ஷபிர் பாஷா விலகியுள்ளார்.
இந்திய அணியின் முன்கள வீரரான ஷபிர் பாஷா கடந்த 2016-ம் ஆண்டு துணை பயிற்சியாளராக சென்னையின் எப்சி அணியில் இணைந்தார்.

கடந்த 8 ஆண்டுகளாக சென்னையின் எப்சி அணியின் செயல் திறனில் முக்கிய பங்கு வகித்து வந்தார். கடந்த 2022-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 4 ஆட்டங்களுக்கு இடைக்கால பயிற்சியாளராகவும் செயல்பட்டார். இவர் பணியாற்றிய காலத்தில் 2017-18-ம் ஆண்டு சீசனில் சென்னையின் எப்சி அணி சாம்பியன் பட்டம் வென்றிருந்தது.

லக்சயா சென் தோல்வி: ஜெர்மனி ஓபன் பாட்மிண்டன் தொடரில் இந்தியாவின் லக்சயா சென் முதல் சுற்றில் போராடி தோல்வி அடைந்தார். ஜெர்மனியின் முல்ஹெய்ம் நகரில் நடைபெற்று வரும் இந்தத் தொடரில் ஆடவர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் 12-ம் நிலை வீரரான இந்தியாவின் லக்சயா சென், 41-ம் நிலை வீரரான பிரான்ஸின் கிறிஸ்டோ போபோவை எதிர்த்து விளையாடினார். 46 நிமிடங்கள் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் லக்சயா சென் 19-21, 16-21 என்ற நேர் செட்டில் போராடி தோல்வி அடைந்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x