Published : 07 Feb 2023 06:05 AM
Last Updated : 07 Feb 2023 06:05 AM

தேசிய கேரம் போட்டியில் தமிழக வீரர்கள் அசத்தல்

எம்.காஸிமா

சென்னை: அகில இந்திய கேரம் கூட்டமைப்பு சார்பில் 47-வது ஜூனியர் மற்றும் இளையோர் தேசிய கேரம் சாம்பியன்ஷிப் போட்டி மகாராஷ்டிராவில் நடைபெற்றது. இதில் சிறுமியர் பிரிவில் சென்னையைச் சேர்ந்த எம்.காஸிமா முதலிடம் பிடித்தார். 2-வது இடத்தை ஷாலு குமாரி (பிஹார்), 3-வது இடத்தை கசன் நிர்கன் (மகாராஷ்டிரா) கைப்பற்றினர்.

சிறுவர் பிரிவில் தமிழகத்தின் திருப்பூரைச் சேர்ந்த கே.நவீன் குமார் முதலிடம் பிடித்து அசத்தினார். 2-வது இடத்தை சென்னையை சேர்ந்த ஏ.அப்துர் ரகீம், எம்.மிதுன் ஆகியோர் பிடித்தனர். மகளிருக்கான இளையோர் பிரிவில் சென்னையை சேர்ந்த எல்.கீர்த்தனா 3-வது இடம் பிடித்தார்.

ஆடவருக்கான இளையோர் பிரிவில் விதர்பாவைச் சேர்ந்த குரு சரண் முதலிடம் பிடித்தார். 2-வது இடத்தை மகாராஷ்டிராவைச் சேர்ந்த துஷ்யந்த் குப்தாவும், 3-வது இடத்தை உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த ஷிப்தயாள் யாதவும் கைப்பற்றினர். தமிழகத்தின் திண்டுக்கலைச் சேர்ந்த டி.பெலிக்ஸ் 4-வது இடம் பிடித்தார்.

அணிகள் சாம்பியன்ஷிப்பில் சிறுமியர் பிரிவில் தமிழகம் தங்கப் பதக்கம் வென்றது. சிறுவர் பிரிவில் வெண்கலப் பதக்கம் பெற்றது. ஒட்டுமொத்தமாக இந்தத் தொடரில் தமிழகத்தைச் சேர்ந்த வீரர், வீராங்கனைகள் 8 தங்கம், ஒரு வெற்றி, 7 வெண்லகப் பதக்கம் வென்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x