Published : 29 Jul 2014 11:47 AM
Last Updated : 29 Jul 2014 11:47 AM

காமன்வெல்த் பளுதூக்குதல்: இந்திய வீரர் விகாஸுக்கு வெள்ளிப் பதக்கம்

காமன்வெல்த் போட்டியில் ஆடவருக்கான 85 கிலோ எடைப்பிரிவு பளுதூக்குதலில் இந்திய வீரர் விகாஸ் தாகூர் வெள்ளிப் பதக்கம் வென்றார்.

20-வது காமன்வெல்த் போட்டிகள், ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் நடைபெற்று வருகின்றன. இப்போட்டியில் பதக்கப்பட்டியலில் இந்தியா 4-வது இடத்தில் இருக்கிறது.

இதற்கு மேலும் வலு சேர்க்கும் வகையில், இந்திய பளுதூக்கும் வீரர் விகாஸ் தாகூர் வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார்.

21-வயதான விகாஸ் மொத்தம் 333 கிலோ எடையை தூக்கினார். 150 கிலோவை ஸ்நாட்ச் முறையிலும், 183 கிலோவை கிளீன் அண்ட் ஜெர்க் பிரிவிலும் அவர் தூக்கினார். இப்போட்டியில் தங்கப் பதக்கத்தை நியூசிலாந்து வீரர் வென்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x