Published : 07 Dec 2022 12:43 AM
Last Updated : 07 Dec 2022 12:43 AM

காலிறுதிக்கு தகுதிபெற்ற ஒரே ஆப்பிரிக்க அணி - பெனால்டி ஷூட் அவுட்டில் ஸ்பெயினை வீழ்த்தியது மொராக்கோ

உலகக் கோப்பை கால்பந்து தொடரில் கால் இறுதிக்கு முந்தைய சுற்றில் இன்று மொராக்கோ - ஸ்பெயின் அணிகள் இன்று மோதின. எஜுகேஷன் சிட்டி மைதானத்தில் நடந்த இந்தப் போட்டியில், தொடக்கம் முதல் இரு அணி வீரர்களும் கோல் அடிக்க முயற்சித்தனர். அந்த முயற்சிகள் கைகூடவில்லை. ஆட்ட நேர முடிவிலும் இரு அணிகளும் கோல் அடிக்காததால் இரு அணிகளும் 0-0 என சமனிலை வகித்தன.

இதன்பின் வெற்றியை தீர்மானிக்க ஆட்டம் கூடுதலாக 10 நிமிடங்கள் என 3 முறை நீட்டிக்கப்பட்டது. ஆனால், இரு அணியும் கோல் அடிக்காததையடுத்து பெனால்டி ஷூட் அவுட் முறை கொண்டு வரப்பட்டது. பெனால்டி ஷூட் அவுட்டில் மொராக்கோ அணி 3-0 என்ற கணக்கில் ஸ்பெயினை போராடி வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியது.

வெற்றிக்கு மொராக்கோ கோல்கீப்பர் 31 வயதான யாசின் பவுனோ முக்கிய பங்கு வகித்தார். ஏனென்றால், பெனால்டி ஷூட் அவுட்டில் 3 முறை பெனால்டி கோல்களை தடுத்து வெற்றிக்கு உதவியது அவர்தான். இதனிடையே, நடப்பு உலகக்கோப்பையில் பெனால்டி ஷூட்-அவுட் முறையில் இரண்டாவது வென்ற அணி மொராக்கோ.

இந்த வெற்றியின் மூலம் கத்தார் உலகக் கோப்பை கால்பந்து தொடரில் காலிறுதிக்கு தகுதிபெற்ற ஒரே ஆப்பிரிக்க கண்டத்தை சேர்ந்த அணியாக மொராக்கோ உருவெடுத்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x