Published : 06 Dec 2022 04:25 AM
Last Updated : 06 Dec 2022 04:25 AM

FIFA WC 2022 | கோல் மழை பொழிந்த பிரேசில் வீரர்கள் - தென் கொரியாவை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேற்றம்

தோகா: கத்தாரில் நடைபெறும் 22-வது உலகக் கோப்பை கால்பந்து தொடரில் இன்று பிரேசில், தென் கொரியா அணிகள் பலப்பரீட்சை நடத்தின.

இந்த ஆட்டம் தோகாவிலுள்ள ஸ்டேடிடம் 974-ல் நள்ளிரவு 12.30 மணிக்கு நடைபெற்றது. காயத்தால் ஓய்வில் இருந்த பிரேசில் அணியின் கேப்டன் மற்றும் நட்சத்திர வீரர் நெய்மர் இப்போட்டியில் களம்கண்டார். ஆட்டத்தின் தொடக்கம் முதலே பிரேசில் அதிரடியை கையாண்டது. சொல்லப்போனால் கோல் மழை பொழிந்தனர் எனலாம். முதல் கோலை வினி ஜூனியர் அடித்தார். அவர் ஆட்டத்தின் 7வது நிமிடத்தில் அடிக்க, 13வது நிமிடத்தில் நெய்மர் தன் பங்கிற்கு ஒரு கோல் அடித்தார்.

இதன்பின் பிரேசில் வீரர்கள் ரிச்சர்லிசன் 29-வது நிமிடத்திலும், லூகாஸ் பகியூடா 39வது நிமிடத்திலும் தலா ஒரு கோல் அடிக்க முதல் பாதியில் பிரேசில் 4 - 0 என்று முன்னிலை வகித்தது. இரண்டாம் பாதியில் பிரேசில் அணியால் கோல் அடிக்க முடியவில்லை. அதேநேரம், தென் கொரியாவின் 76-வது நிமிடத்தில் பெய்க் சியூங் ஒரு கோல் அடித்தார். என்றாலும் ஆட்ட நேர முடிவில், பிரேசில் அணி 4-1 என்ற கணக்கில் தென் கொரியாவை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x