

லண்டன் கிளாசிக் செஸ் போட்டி நேற்று முன்தினம் தொடங்கியது. இதில் உலகின் முன்னணி வீரர் களான அரோனியன், மைக்கேல் ஆடம்ஸ், ஹிகாரு நகமுரா, வெஸ்லி, மேக்ஸ்மி வாச்சியர், அனிஷ் கிரி, பேஃபியானோ கருணா, விஸ்வநாதன் ஆனந்த், விளாடிமிர் கிராம்னிக், வெஸ்லின் தபலோவ் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.
மொத்தம் 9 சுற்றுகள் கொண்ட இந்த தொடரில் 5 முறை உலக சாம்பி யனான இந்தியாவின் விஸ்வநாதன் ஆனந்த் தனது முதல் சுற்றில், உலக தரவரிசையில் 2-வது இடத்தில் உள்ள அமெரிக்காவின் பேஃபியானோ கருணாவுடன் மோதி னார். 44-வது நகர்த்தலின் போது இந்த ஆட்டம் டிராவில் முடிவடைந் தது. இதன் மூலம் இருவருக்கும் 0.5 புள்ளிகள் வழங்கப்பட்டது.
அரோனியன், மைக்கேல் ஆடம் ஸையும், விளாடிமிர் கிராம்னிக், வெஸ்லின் தபலோவையும், வெஸ்லி, நகமுராவையும் வீழ்த்தினர். இதன் மூலம் வெற்றி பெற்றவர்கள் தலா ஒரு புள்ளிகள் பெற்றனர். அனிஷ் கிரி-வாச்சியர் மோதிய ஆட்டம் டிராவில் முடிவடைந்தது.