Published : 24 Nov 2022 11:28 PM
Last Updated : 24 Nov 2022 11:28 PM

FIFA WC 2022 | 5 உலகக் கோப்பை தொடர்களில் கோல் பதிவு செய்து ரொனால்டோ சாதனை!

கத்தார்: 5 உலகக் கோப்பை தொடரில் கோல் பதிவு செய்த வீரர் என்ற சாதனையைப் படைத்துள்ளார் போர்ச்சுக்கல் வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ.

ஃபிஃபா உலகக் கோப்பை கால்பந்து தொடரில் போர்ச்சுகல் மற்றும் கானா அணிகள் விளையாடி வருகின்றன. இந்தப் போட்டியில் 65-வது நிமிடத்தில் பெனால்டி வாய்ப்பில் கிறிஸ்டியானோ ரொனால்டோ கோல் அடித்து இந்த உலகக் கோப்பையில் அணிக்கான முதல் கோலை பதிவு செய்தார். இன்று கோல் அடித்ததன்மூலம் லயோனல் மெஸ்ஸி இதுவரை வைத்திருந்த சாதனையை தகர்த்து புதிய சாதனையை படைத்தார் ரொனால்டோ.

மெஸ்ஸி நான்கு வெவ்வேறு உலகக் கோப்பை போட்டிகளில் (2006, 2014, 2018, 2022) கோல் அடித்த ஐந்தாவது வீரர் என்ற சாதனையை படைத்திருந்தார். இதற்கு முன்னதாக பீலே, உவே சீலர், மிரோஸ்லாவ் க்ளோஸ் மற்றும் கிறிஸ்டியானோ ரொனால்டோ ஆகியோரும் இதே சாதனையை செய்திருந்தனர். என்றாலும், கிறிஸ்டியானோ ரொனால்டோ இன்றைய போட்டியில் கோல் அடித்ததன்மூலம் மெஸ்ஸியின் சாதனையை முந்தி 2006, 2010, 2014, 2018, 2022 ஆகிய ஐந்து உலகக்கோப்பைகளில் கோல் அடித்த வீரர் என்ற சாதனையை படைத்தார்

அதேபோல், ஃபிஃபா உலகக் கோப்பை வரலாற்றில் கோல் எண்ணிக்கையில் அதிக கோல் அடித்த வீரர் என்ற சாதனையையும் ரொனால்டோ செய்துள்ளார். மெஸ்ஸி இதுவரை ஃபிஃபா உலகக் கோப்பை தொடர்களில் இதுவரை 20 போட்டிகளில் விளையாடி 7 கோல்களை அடித்துள்ளார். அதேநேரம், உலகக் கோப்பை தொடர்களில் இதுவரை 7 கோல்கள் அடித்திருந்த ரொனால்டா, இன்று எட்டாவது கோலைப் பதிவு செய்து அசத்தினார்.

போர்ச்சுக்கல் அணியை பொறுத்தவரை புகழ்பெற்ற வீரர் யூசிபியோ உலகக்கோப்பை தொடரில் 9 கோல்கள் அடித்ததே அதிகபட்ச சாதனையாக இருக்கிறது. இதை முறியடிக்க, ரொனால்டோவுக்கு இன்னும் இரண்டு கோல் தேவைப்படுகிறது. இந்த கத்தார் உலகக்கோப்பை தொடரிலேயே அதை அவர் முறியடிப்பார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இதனிடையே, ஆட்டத்தின் 73வது நிமிடத்தில் கானா அணி ஈக்வலைசர் கோல் அடிக்க 1 - 1 என்ற கோல் கணக்கில் ஆட்டம் சுவாரஸ்யமாக செல்கிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x