Published : 18 Oct 2022 03:45 PM
Last Updated : 18 Oct 2022 03:45 PM

T20 WC | பாகிஸ்தானை வென்றால் இந்திய அணியால் உலகக் கோப்பையையும் வெல்ல முடியும்: ரெய்னா

சுரேஷ் ரெய்னா.

எதிர்வரும் 23-ம் தேதி இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் டி20 உலகக் கோப்பை தொடரில் சூப்பர் 12 சுற்றில் நேருக்கு நேர் பலப்பரீட்சை செய்ய உள்ளன. இந்நிலையில், இந்த போட்டியில் இந்தியா வென்றால், உலகக் கோப்பையையும் வெல்லும் என தான் நினைப்பதாக இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா தெரிவித்துள்ளார்.

நடப்பு டி20 கிரிக்கெட் போட்டியில் இந்தியா உட்பட மொத்தம் 16 அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றன. தற்போது முதல் சுற்று போட்டிகள் நடைபெற்று வருகிறது. டி20 உலகக் கோப்பையை வெல்லும் பேவரைட் அணிகளில் ஒன்றாக இந்தியா உள்ளது.

இந்த நிலையில், “இந்திய கிரிக்கெட் அணி, பாகிஸ்தானுக்கு எதிரான முதல் போட்டியில் வென்றால் உலகக் கோப்பையை வெல்லும் என நான் நினைக்கிறேன். ரோகித் சிறப்பான தலைவராக செயல்பட்டு வருகிறார். விராட் கோலி சிறப்பான ஃபார்மில் உள்ளார். சூர்யகுமார் யாதவ் மற்றும் அர்ஷ்தீப் சிங் போன்ற வீரர்களும் அணியில் உள்ளனர். ஒட்டுமொத்தமாக இந்திய அணி சிறப்பாக செயல்பட்டு வருகிறது” என ரெய்னா தெரிவித்துள்ளார்.

இந்திய அணி 2011-ல் உலகக் கோப்பையை வென்றபோது அந்த அணியில் விளையாடியவர் ரெய்னா. ஐபிஎல் களத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி இருந்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x