Published : 17 Oct 2022 02:34 PM
Last Updated : 17 Oct 2022 02:34 PM

T20 WC வார்ம்-அப் | 2 2 W W W W - கடைசி ஓவரில் சம்பவம்‌ செய்த ஷமி; ஆஸி.யை வீழ்த்தியது இந்தியா

ஷமி மற்றும் இந்திய வீரர்கள்

பிரிஸ்பேன்: நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரின் வார்ம்-அப் போட்டியில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிகள் விளையாடின. இந்தப் போட்டியில் இந்திய அணி கடைசி ஓவரில் த்ரில் வெற்றி பெற்றது. ஷமி அசத்தலாக பந்து வீசி இந்திய அணிக்கு வெற்றி தேடி கொடுத்தார்.

பிரிஸ்பேன் நகரில் உள்ள காபா கிரிக்கெட் மைதானத்தில் இந்தப் போட்டி நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பவுலிங் தேர்வு செய்தது. இந்தியா முதலில் பேட் செய்து 186 ரன்களை குவித்தது. ராகுல் மற்றும் சூர்யகுமார் யாதவ் அரை சதம் விளாசி இருந்தனர். தினேஷ் கார்த்திக் 14 பந்துகளில் 20 ரன்கள் எடுத்திருந்தார்.

187 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை ஆஸ்திரேலியா விரட்டியது. கேப்டன் ஆரோன் ஃபின்ச் 76 ரன்கள் எடுத்தார். மிட்செல் மார்ஷ் மற்றும் மேக்ஸ்வெல் ஆகியோரும் டீசன்ட்டான ரன்களை எடுத்தனர். அந்த அணியின் வெற்றிக்கு கடைசி ஓவரில் 11 ரன்கள் தேவைப்பட்டது.

இந்தப் போட்டியில் அதுவரை பந்து வீசாமல் இருந்த முகமது ஷமியை பந்து வீசச் சொல்லி பணித்தார் கேப்டன் ரோகித் சர்மா. ஷமி, பும்ராவுக்கு மாற்றாக அணியில் இடம் பெற்றுள்ளார். கிட்டத்தட்ட சுமார் ஓராண்டு காலம் அவர் சர்வதேச டி20 போட்டிகளில் விளையாடாமல் இருந்தார். கடைசி ஓவரில் அவர் என்ன மாயம் செய்ய போகிறார் என்று எதிர்பார்ப்பு இருந்தது.

முதல் இரண்டு பந்துகளில் ஆஸ்திரேலியா 4 ரன்கள் எடுத்தது. மூன்றாவது பந்தில் கம்மின்ஸ் விக்கெட்டை கைப்பற்றி அசத்தினார். அடுத்த பந்தில் ஆஷ்டன் அகர் ரன் அவுட்டானார். தொடர்ந்து 5 மாறும் 6-வது பந்தில் ஜோஷ் இங்லிஸ் மற்றும் ரிச்சர்ட்சன் விக்கெட்டுகளை ஷமி கைப்பற்றி அசத்தினார். இதன் மூலம் இந்திய அணியின் டெத் ஓவர் சிக்கலுக்கும் தீர்வு கொடுத்துள்ளார் அவர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x