Published : 03 Nov 2016 10:48 AM
Last Updated : 03 Nov 2016 10:48 AM

ஐஎஸ்எல்: சென்னை- மும்பை ஆட்டம் டிரா

ஐஎஸ்எல் கால்பந்து தொடரில் சென்னை நேரு விளையாட்ட ரங்கில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான சென்னையின் எப்சி - மும்பை சிட்டி எப்சி அணிகள் மோதின. முதல் பாதியில் இரு அணிகள் தரப்பிலும் கோல் எதும் அடிக்கப்படவில்லை.

52-வது நிமிடத்தில் சென்னை அணி முதல் கோலை அடித்தது. மவுரிஸியோ பெலுசோ உதவி யுடன் இந்த கோலை ஜே ஜே லால்பெகுலா அடித்தார். இதனால் சென்னை அணி 1-0 என முன்னிலை பெற்றது. ஆட்டம் முடிவடைய இரு நிமிடங்கள் இருந்த நிலையில் மும்பை அணி பதிலடி கொடுத்தது.

அந்த அணியின் லியோ கோஸ்டா இந்த கோலை அடிக்க ஆட்டம் 1-1 என சமநிலையை எட்டியது. அதன் பின்னர் இரு அணிகள் தரப்பில் மேலும் கோல்கள் அடிக்கப்படவில்லை. இதனால் ஆட்டம் 1-1 என சமநிலையில் முடிவடைந்தது. 7 போட்டிகளில் விளையாடியுள்ள சென்னை அணி 10 புள்ளிகள் பெற்றுள்ளது. தொடரில் 2-வது முறையாக ஆட்டத்தை டிரா கண்டுள்ளது.

தொடரில் இன்று இரவு 7 மணிக்கு புனேவில் நடைபெறும் ஆட்டத்தில் புனே-கோவா அணிகள் மோதுகின்றன. 6 ஆட்டங் களில் விளையாடியுள்ள புனே 6 புள்ளிகளுடன் 7-ம் இடத்திலும், 7 ஆட்டங்களில் விளையாடி உள்ள கோவா 4 புள்ளிகளுடன் கடைசி இடத்திலும் உள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x