Published : 09 Oct 2022 06:35 AM
Last Updated : 09 Oct 2022 06:35 AM

செவித்திறன் குறைந்தவர்களுக்கான டி20 சாம்பியன்ஸ் டிராபி - இறுதி சுற்றில் இந்தியா

அஜ்மான்: செவித்திறன் குறைந்தவர்களுக்கான சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் டி 20 சாம்பியன்ஸ் டிராபி தொடரை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்தி வருகிறது. இதில் இந்தியா லீக் ஆட்டத்தில் வங்கதேசம், ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா அணிகளை தோற்கடித்திருந்தது.

இந்நிலையில் நேற்று நடைபெற்ற தகுதி சுற்று 1-ல் இந்தியா – தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதின. முதலில் பேட் செய்த தென் ஆப்பிரிக்கா அணியால் 100 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இந்திய அணி தரப்பில் குல்தீப் சிங் 3 விக்கெட்கள் வீழ்த்தினார்.

எளிதான இலக்கை விரட்டிய இந்திய அணி 15.5 ஓவர்களில் 3 விக்கெட்களை மட்டும் இழந்து 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பேட்டிங்கில் இந்திய அணி சார்பில் சாய் ஆகாஷ் 36 ரன்கள் விளாசினார். சாய் ஆகாஷ் சென்னை ஆலந்தூர் பகுதியை சேர்ந்தவர் ஆவார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x