Published : 06 Oct 2022 06:14 AM
Last Updated : 06 Oct 2022 06:14 AM

உலக டேபிள் டென்னிஸில் இந்திய மகளிர் அணி தோல்வி

செங்குடு: உலக டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் அணிகள் பிரிவில் இந்திய மகளிர் அணி 0-3 என்ற கணக்கில் சீன தைபேவிடம் தோல்வியடைந்து தொடரில் இருந்து வெளியேறியது.

சீனாவின் செங்குடு நகரில் நடைபெற்று வரும் இந்தத் தொடரில் இந்தியமகளிர் அணி கால் இறுதிக்கு முந்தையசுற்றில் நேற்று சீன தைபேவை எதிர்த்து விளையாடியது. இதில் இந்தியாவின் மணிகா பத்ரா, ஜா அகுலா, தியாசிட்லே ஆகியோர் தங்களது ஆட்டங்களில் தோல்வியடைந்தனர். மணிகா பத்ரா 7-11, 9-11, 3-11 என்ற கணக்கில் சென் ஸு யுவிடமும் ஜா அகுலா 8-11, 11-5, 6-11, 9-11 என்ற கணக்கில் ஷிங்கிடமும் தியா சிட்லே 6-11, 11-9, 11-9, 8-11 7-11 என்ற செட் கணக்கில் லியு சிங் யினிடமும் வீழ்ந்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x