Published : 05 Oct 2022 04:46 PM
Last Updated : 05 Oct 2022 04:46 PM

மன்கட் அவுட் எச்சரிக்கை கொடுத்த தீபக் சஹார்: நெட்டிசன்கள் ரியாக்‌ஷன்

தீபக் சஹார் மற்றும் ஸ்டப்ஸ்.

இந்தூர்: இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்க அணிகள் விளையாடிய மூன்றாவது டி20 போட்டியில் நான்-ஸ்ட்ரைக்கர் எண்டில் இருந்த தென்னாப்பிரிக்க பேட்ஸ்மேன் ஸ்டப்ஸுக்கு இந்திய பவுலர் தீபக் சஹார் மன்கட் முறை ரன்-அவுட் வார்னிங் கொடுத்திருந்தார். அதற்கு சமூக வலைதளத்தில் நெட்டிசன்கள் ரியாக்ட் செய்துள்ளனர்.

தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. இந்தப் பயணத்தில் டி20 மற்றும் ஒருநாள் தொடர் அடங்கும். 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நிறைவடைந்துள்ளது. இந்திய அணி 2-1 என்ற கணக்கில் தொடரை வென்றுள்ளது. கடைசி போட்டியில் இந்திய அணி தோல்வியை தழுவியுள்ளது. இந்த போட்டியில்தான் இந்தச் சம்பவம் நடந்துள்ளது.

தென்னாப்பிரிக்க அணி முதலில் பேட் செய்து 227 ரன்கள் குவித்தது. அந்த இன்னிங்ஸின் 16-வது ஓவரை தீபக் சஹார் வீசி இருந்தார். அவர் பந்து வீசுவதற்கு முன்பாகவே நான்-ஸ்ட்ரைக்கர் எண்டில் இருந்த ஸ்டப்ஸ் சிங்கிள் எடுக்க கிரிஸை விட்டு சில அடி தூரம் நகர்ந்து சென்றிருந்தார். அதை கவனித்த சஹார் ‘ரன்-அவுட்’ செய்ய வாய்ப்பு உள்ளதாக அவரை மென்மையான முறையில் எச்சரித்திருந்தார். அது ஆட்டத்தில் பார்வையாளர்களின் கவனத்தை ஈரத்திருந்தது.

அண்மையில் இங்கிலாந்து அணிக்கு எதிராக இந்திய வீராங்கனை தீப்தி சர்மா இங்கிலாந்து வீராங்கனை சார்லியை இந்த முறையில் ரன்-அவுட் செய்திருந்தார். இது சர்ச்சையாக விவாதிக்கப்பட்டு வருகிறது. அதற்குள் சஹார் இப்படி செய்துள்ளார்.

நெட்டிசன்களின் ரியாக்‌ஷன்: “மன்கட் அவுட் விதி இங்கிலாந்து வீரர்களுக்கு எதிராக மட்டும் தான் பயன்படுத்தப்படும்”, “பவுண்டரி லைனில் உள்ள அஸ்வினின் மைண்ட் வாய்ஸ்?”, “தீப்தி இல்லை இது தீபக்” என அது நீள்கிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x