Published : 04 Oct 2022 06:35 AM
Last Updated : 04 Oct 2022 06:35 AM

டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப்பில் இந்திய மகளிர் அசத்தல்

செங்குடு: டேபிள் டென்னிஸ் அணிகளுக்கான உலக சாம்பியன்ஷிப் சீனாவின் செங்குடு நகரில் நடைபெற்றுவருகிறது. இதில் இந்திய மகளிர் அணி எகிப்தை 3-1 என்ற கணக்கில் வீழ்த்தி நாக்-அவுட் சுற்றுக்கு முன்னேறியது. இந்திய அணி சார்பில் முதல் ஆட்டத்தில் ஸ்ரீஜா அகுலா 11-6, 11-4, 11-1 என்ற கணக்கில் ஹனா கோடாவை தோற்கடித்தார். 2-வது ஆட்டத்தில் அனுபவம் வாய்ந்த மணிகா பத்ரா 8-11, 11-6, 11-7, 2-11, 11-8 என்ற செட்கணக்கில் தினாவை வீழ்த்தினார்.

3-வது ஆட்டத்தில் இந்தியாவின் தியா சித்தலே 11-5, 10-12, 11-9, 9-11,4-11 என்ற செட் கணக்கில் யூஸ்ரா ஹெல்மியிடம் தோல்வியடைந்தார். இதையடுத்து நடைபெற்ற 4-வது ஆட்டத்தில் ஜா அகுலா 11-8, 11-8, 9-11, 11-6 என்ற செட் கணக்கில் தினா மெஷ்ரெஃப்பை தோற்கடித்தார். இந்த தொடரில் இந்திய மகளிர் அணி பெற்ற 3-வது வெற்றி இதுவாகும். லீக் சுற்றின் முடிவில் இந்திய மகளிர் அணி தனது பிரிவில் 2-வது இடம் பிடித்து நாக்-அவுட் சுற்றுக்கு முன்னேறியது.

முன்னதாக ஆடவருக்கான அணிகள் பிரிவில் இந்திய அணி3-2 என்ற கணக்கில் கஜகஸ்தானை வென்றது. இந்திய ஆடவர் அணி தரப்பில் சத்தியன், மானவ் தாக்கர், ஹர்மீத் தேசாய் ஆகியோர் வெற்றி பெற்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x