

இங்கிலாந்துக்கு எதிராக மீதமுள்ள 3 டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணியில் புவனேஷ்வர் குமார் சேர்க்கப்பட்டுள்ளார்.
தொடக்க வீரர் கவுதம் கம்பீர் அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார், கவுதம் கம்பீர் சர்வதேச கிரிக்கெட் வாழ்வு முடிவுக்கு வந்து விட்டதாகவே இது அறிவுறுத்துகிறது.
கொல்கத்தாவில் நியூஸிலாந்துக்கு எதிராக 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய புவனேஷ்வர் குமார் முதுகு காயம் காரணமாக 6 வாரங்கள் கிரிக்கெட்டிலிருந்து விலகியிருந்தார்.
இந்நிலையில் தன் உடல் தகுதியை நிரூபிக்க மும்பைக்கு எதிரான ரஞ்சி கோப்பை கிரிக்கெட்டில் ஆடி 36 ஓவர்களை வீசினார்.
இதனையடுத்து அவர் மீண்டும் இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
இந்திய அணி வருமாறு: விராட் கோலி (கேப்டன்), ரஹானே (துணை கேப்டன்), ராகுல், முரளி விஜய், புஜாரா, கருண் நாயர், விருத்திமான் சஹா, அஸ்வின், ஜடேஜா, ஜெயந்த் யாதவ், அமித் மிஸ்ரா, மொகமது ஷமி, உமேஷ் யாதவ், இசாந்த் சர்மா, புவனேஷ்வர் குமார் ஹர்திக் பாண்டியா.