Published : 04 Jul 2014 08:49 AM
Last Updated : 04 Jul 2014 08:49 AM

இந்தியா வருகிறது ஐசிசி உலகக் கோப்பை

அடுத்த உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி 2015-ல் ஆஸ்திரேலியா மற்றும் நியூஸிலாந் தில் நடைபெறுகிறது. அதை முன்னிட்டு உலகக் கோப்பையில் பங்கேற்கும் அனைத்து நாடுகளுக்கும் கோப்பை எடுத்து செல்லப்படுகிறது.

அதன் ஒரு பகுதியாக வரும் 19-ம் தேதி முதல் 23-ம் தேதி வரை இந்தியாவின் பல்வேறு பகுதிகளுக்கு உலகக் கோப்பை எடுத்து செல்லப்படுகிறது. அதற்கு முன்னதாக இன்று முதல் 3 நாள்களுக்கு இலங்கையில் வைக்கப்படுகிறது. வரும் 6-ம் தேதி கொழும்பில் நடைபெறவுள்ள இலங்கை-தென் ஆப்பிரிக்கா இடையிலான முதல் ஒருநாள் போட்டியின்போது ரசிகர்களின் பார்வைக்காக வைக்கப்படுகிறது.

ஜூலை 25 மற்றும் 26-ம் தேதிகளில் வங்கதேசத்தில் ரசிர்களின் பார்வைக்கு வைக்கப் படுகிறது. போட்டியில் பங்கேற்கும்12 நாடுகளுக்கும் கொண்டு செல்லப்படும் இந்த உலகக் கோப்பை, நவம்பர் 6-ம் தேதி மெல்போர்ன் சென்றடைகிறது. அதைத் தொடர்ந்து உலகக் கோப்பை போட்டிக்கான 100 நாள் கொண்டாட்டம் ஆரம்பமாகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x