Published : 16 Sep 2022 06:34 AM
Last Updated : 16 Sep 2022 06:34 AM

17 ஆண்டுகளுக்கு பின் பாகிஸ்தானில் இங்கிலாந்து கிரிக்கெட் அணியினர்

கராச்சி: இங்கிலாந்து கிரிக்கெட் அணி பாதுகாப்பு காரணங்களை சுட்டிக் காட்டி கடந்த 2005-க்கு பிறகு பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவில்லை. இந்நிலையில் 17 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது பாகிஸ்தான் சென்றுள்ளது இங்கிலாந்து கிரிக்கெட் அணி.

இங்கிலாந்து அணியைச் சேர்ந்த 19 வீரர்கள், பயிற்சியாளர்கள் நேற்று கராச்சி விமான நிலையம் வந்தடைந்தனர். இரு அணிகள் இடையே 7 டி 20 ஆட்டங்கள் கொண்ட தொடர் நடைபெற உள்ளது. இந்தத் தொடரானது வரும் 20-ம் தேதி முதல் அக்டோபர் 2-ம் தேதி வரை நடைபெறுகிறது. டி 20 தொடரை முடித்துக் கொண்டு தாயகம் செல்லும் இங்கிலாந்து அணி அதன் பின்னர் டிசம்பர் மாதம் 3 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவதற்காக பாகிஸ்தானுக்கு மீண்டும் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x