Published : 12 Sep 2022 06:55 AM
Last Updated : 12 Sep 2022 06:55 AM

எஸ்ஏஎப்எப் மகளிர் கால்பந்து: மாலத்தீவுகள் அணியை வீழ்த்தியது இந்தியா

காத்மாண்டு: தெற்காசிய கால்பந்து சம்மேளனம் (எஸ்ஏஎப்எப்) நடத்தும் மகளிர் கால்பந்துப் போட்டியின் லீக் ஆட்டத்தில் மாலத்தீவுகள் அணியை இந்தியா வீழ்த்தியது.

இந்த லீக் ஆட்டம் நேற்று முன்தினம் நேபாளத் தலைநகர் காத்மாண்டுவில் உள்ள தசரத மைதானத்தில் நடைபெற்றது.

இதில் இந்திய மகளிர் அணி 9-0 என்ற கோல் கணக்கில் மாலத்தீவுகள் அணியை வீழ்த்தியது. இதன்மூலம் இந்திய அணி 6 புள்ளிகளுடன் அரை இறுதிக்கு முன்னேறியது.

இந்திய அணி தரப்பில் அஞ்சு தமங் 4 கோல்களும், தங்மேய் கிரேஸ் 2 கோல்களும், பிரியங்கா தேவி, சவும்யா குகுலோத், காஷ்மினா ஆகியோர் தலா ஒரு கோலும் போட்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x