Published : 02 Sep 2022 05:17 AM
Last Updated : 02 Sep 2022 05:17 AM

ஐஎஸ்எல் கால்பந்து தொடர் - அக்.7-ல் தொடக்கம்

மும்பை: ஐஎஸ்எல் கால்பந்து தொடரின் 9-வது சீசன் வரும் அக்டோபர் 7-ம் தேதி கொச்சியில் தொடங்குகிறது. 11 அணிகள் கலந்துகொள்ளும் இந்தத் தொடரானது 117 ஆட்டங்களுடன் சுமார் 5 மாதங்கள் நடைபெற உள்ளது. ஒவ்வொரு அணியும் மற்றஅணிகளுடன் தலா இரு முறை மோதும். அந்தவகையில் ஒவ்வொரு அணியும் 20 ஆட்டங்களில் மோதுகின்றன. தொடக்க நாளில் கேரளா – ஈஸ்ட் பெங்கால் அணிகள் மோதுகின்றன. சென்னையின் எப்சி தனது முதல் ஆட்டத்தில் அக்டோபர் 10-ம் தேதி ஏடிகே மோகன் பகானுடன் மோதுகிறது.

லீக் ஆட்டங்கள் அடுத்த ஆண்டு பிப்ரவரி 26-ல் முடிவடைகிறது. இதைத் தொடர்ந்து மார்ச் மாதம் பிளேஆஃப், அரை இறுதி மற்றும் இறுதிப்போட்டி நடைபெறுகிறது. இம்முறை பிளே ஆஃப் சுற்று அறிமுகப்படுத்தப்பட உள்ளது. லீக் சுற்றில் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகள் அரை இறுதி சுற்றுக்கு நேரடியாக தகுதி பெறும்.3 முதல் 6-வது இடத்தை பிடிக்கும் 4 அணிகள் பிளே ஆஃப் சுற்றில் மோதும். இதில் இரு அணிகள் அரை இறுதிக்கு தகுதி பெறும்.

லீக் சுற்றில் 3-வது மற்றும் 6-வது இடத்தை பிடிக்கும் அணிகள் பிளே ஆஃப் சுற்றின் முதல் எலிமினேட்டர் ஆட்டத்தில் மோதும். 2-வது எலிமினேட்டர் ஆட்டத்தில் லீக் சுற்றில் 4-வது இடம் பிடித்த அணி, 5-வது இடத்தை பிடித்த அணியை எதிர்கொள்ளும். எலிமினேட்டர் சுற்றில் வெற்றி பெறும் இரு அணிகள் லீக் சுற்றில் முதல் இரு இடங்களை பிடித்த அணிகளுடன் அரை இறுதியில் பலப்பரீட்சை நடத்தும். அரை இறுதி இரு கட்டங்களாக நடத்தப்பட உள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x