Published : 17 Oct 2016 04:54 PM
Last Updated : 17 Oct 2016 04:54 PM
நீதிபதி லோதா கமிட்டி பரிந்துரைத்த நிர்வாகக் குழுவை அமைப்பது பிசிசிஐ-யில் அரசு தலையீடு விவகாரமாகும் என்று ஐசிசியின் சி.இ.ஓ. ஷஷாங்க் மனோகரை பேசுமாறு தான் கோரவில்லை என்று பிசிசிஐ தலைவர் அனுராக் தாக்குர் உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
உச்ச நீதிமன்றத்தில் இன்று பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்த அனுராக் தாக்குர், “அக்டோபர் 7-ம் தேதி உத்தரவுக்கிணங்க நான் இந்தப் பிரமாணப்பத்திரத்தை தாக்கல் செய்கிறேன். அதாவது லோதா கமிட்டி நியமனம் அரசின் தலையீடு என்று ஐசிசி சி.இ.ஓ. ஷஷாங்க் மனோகரை நான் பேசக் கோரினேனா என்பது குறித்த விவகாரமாகும் இது.
ஐசிசி சி.இ.ஓ.விடம் நான் இத்தகைய கோரிக்கை வைத்ததாகக் கூறப்படுவது மறுக்கப்படுகிறது” என்றார்.
அதாவது தான் சமீபத்தில் நடந்த ஐசிசி கூட்டத்தில் கலந்து கொண்ட போது ஐசிசி தலைவரிடம் அவர் பிசிசிஐ தலைவராக இருந்த போது லோதா கமிட்டி பரிந்துரைகளின் படி சி.ஏ.ஜி-யிலிருந்து ஒருவரை பிசிசிஐ-யில் நியமிக்க வேண்டும் என்பது ஐசிசி விதிகளின் அரசின் தலையீடு என்பதாகப் பார்க்கப்பட்டு தடையை எதிர்கொள்ளலாம் என்ற அவரது கருத்து பற்றி சுட்டிக் காட்டியதாக தெரிவித்தார்.
“எனவே அவர் பிசிசிஐ தலைவராக இருந்த போது எடுத்த நிலைப்பாட்டை தெளிவுபடுத்துமாறு அவரிடம் கோரிக்கை வைத்தேன்.
அப்போது மனோகர் என்னிடம் கூறியது என்னவெனில், அவர் இந்த நிலைப்பாட்டை எடுக்கும் போது கோர்ட்டில் வழக்கு நிலுவையில் இருந்தது என்றும் முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை என்றும் என்னிடம் விளக்கினார்” என்று தனது பிரமாணப்பத்திரத்தில் அவர் கூறினார்.
மேலும், பிசிசிஐ-யின் அரசு தலையீடு என்ற கோரலை உச்ச நீதிமன்றம் பிற்பாடு நிராகரித்து பிசிசிஐ-யின் நிதி விவகாரங்களில் இன்னும் வெளிப்படைத்தன்மை ஏற்படுவதை ஐசிசி பாராட்டவே செய்யும் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்ததையும் தனது பிரமாணப்பத்திரத்தில் குறிப்பிட்டார் அனுராக் தாக்குர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT