Published : 02 Oct 2016 11:12 AM
Last Updated : 02 Oct 2016 11:12 AM

204 ரன்களுக்குச் சுருண்டது நியூஸிலாந்து; இந்தியா 112 ரன்கள் முன்னிலை

கொல்கத்தா டெஸ்ட் போட்டியின் 3-ம் நாளான இன்று நியூஸிலாந்து அணி தன் முதல் இன்னிங்ஸில் 204 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

இதனையடுத்து இந்திய அணி 112 ரன்கள் முன்னிலை பெற்று இன்னும் சற்று நேரத்தில் 2-வது இன்னிங்சில் களமிறங்குகிறது. புஜாரா நீண்ட நேரம் பீல்டில் இல்லாததால் அவர் 3-ம் நிலையில் களமிறங்குவது கடினம் என்று தெரிகிறது. ஆனால் டிவி வர்ணனையாளர்கள் அவர் 3-ம் நிலையில் இறங்குவார் என்று தெரிவித்தனர்.

இன்று 128/7 என்று ஜீதன் படேல் 5 ரன்களுடனும், பி.ஜே.வாட்லிங் 12 ரன்களுடனும் இறங்கினர். இதில் ஜீதன் படேல் ஆக்ரோஷமாக ஆடினார் அவர் 9 பவுண்டரிகளுடன் 47 பந்துகளில் 47 ரன்கள் எடுக்க, இவரும் வாட்லிங்கும் சேர்ந்து 8-வது விக்கெட்டுக்காக 60 ரன்களைச் சேர்த்தனர்.

அஸ்வின் தன் ஓவரை வீச வந்தவுடனேயே அவரை ஸ்லாக் ஸ்வீப் செய்ய முயன்றார் ஆனால் மிட் ஆஃபில் கேட்ச் ஆனது. முன்னதாக ஜடேஜா பந்தில் எல்.பி. ஆனார், ஆனால் அது நோ-பால் என்பதால் தப்பித்தார் ஜீதன் படேல்.

25 ரன்கள் எடுத்த பி.ஜே.வாட்லிங், ஷமியின் ரிவர்ஸ் ஸ்விங்கில் எல்.பி.ஆனார். காலை முன்னால் தூக்கிப்போட்டிருந்தால் காலில் வாங்கினால் கூட அவுட் கிடையாது ஆனால் வாட்லிங் அப்படிச் செய்யவில்லை.மிடில் ஸ்டம்புக்கு நேராக வாங்கினார்.

போல்ட் களமிறங்கி அஸ்வினை ஒரு சிக்ஸ் விளாசினார், நீல் வாக்னர், மொகமது ஷமியை லெக் திசையில் ஒரு சிக்ஸ் விளாசினார். கடைசியில் வாக்னர் 10 ரன்கள் எடுத்து ஷமி பந்தில் எல்.பி.ஆனார்.

போல்ட் 6 நாட் அவுட். நியூஸிலாந்து 53 ஓவர்களில் 204 ஆல் அவுட் ஆனது. இந்திய தரப்பில் புவனேஷ் குமார் 5 விக்கெட்டுகளை எடுத்து அசத்த ஷமி 3 விக்கெட்டுகளையும், அஸ்வின், ஜடேஜா தலா 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x