Published : 24 Aug 2022 07:53 AM
Last Updated : 24 Aug 2022 07:53 AM

உலக பாட்மிண்டன் சாம்பியன்ஷிப்: 3-வது சுற்றில் நுழைந்தார் சாய்னா

டோக்கியோ: ஜப்பானின் டோக்கியோ நகரில் உலக பாட்மிண்டன் சாம்பியன்ஷிப் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் மகளிருக்கான ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் சாய்னா நெவால், ஹாங்காங்கின் செயுங் கன் யி-யை எதிர்த்து விளையாடினார். 38 நிமிடங்கள் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் சாய்னா நெவால் 21-19, 21-9 என்ற நேர் செட்டில் வெற்றி பெற்றார்.

சாய்னா நெவால், 2-வது சுற்றில் ஜப்பானின் நோசோமி ஒகுஹாராவுடன் மோதுவதாக இருந்தது. ஆனால் அவர், போட்டியில் இருந்து விலகியுள்ளார். இதனால் சாய்னா நேரடியாக 3-வது சுற்றில் கால்பதித்துள்ளார்.

மகளிர் இரட்டையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் ட்ரீசா ஜாலி மற்றும் புல்லேலா காயத்ரி ஜோடி 21-11, 21-13 என்ற நேர் செட்டில் மலேசியாவின் லோ யீன் யுவான், வலேரி சியோவ் ஜோடியை தோற்கடித்தது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x