Published : 23 Aug 2022 06:02 PM
Last Updated : 23 Aug 2022 06:02 PM

பாகிஸ்தானுக்கு எதிராக அரைசதம் விளாசி விமர்சகர்களின் வாயடைப்பார்: கோலி குறித்து ரவி சாஸ்திரி

மும்பை: எதிர்வரும் ஆசிய கோப்பையின் முதல் போட்டியில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக விராட் கோலி அரைசதம் விளாசி விமர்சகர்களின் வாயடைப்பார் என்று இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைமை பயிற்சியாளரான ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார்.

மாடர்ன் டே கிரிக்கெட்டின் மகத்தான வீரர்களில் ஒருவர், FAB4-களில் ஒருவர், ரன் மெஷின் என்றெல்லாம் போற்றப்படுபவர் கோலி. கடந்த ஆண்டு வரை அவர் எப்போது சதம் விளாசுவார் என்ற எதிர்பார்ப்பு இருந்து வந்தது. ஆனால், இப்போது அவர் ரன் ஸ்கோர் செய்தாலே போதும் என்ற நிலை உருவானது. டெஸ்ட், டி20, ஒருநாள் என அனைத்து ஃபார்மெட்டிலும் எதிரணியின் பந்துவீச்சை விரட்டி விரட்டி வெளுத்து வாங்கும் வல்லமை கொண்டவர் கோலி. சர்வதேச கிரிக்கெட்டில் மொத்தம் 23,726 ரன்களை எடுத்துள்ளார்.

இருந்தும் மோசமான ஃபார்ம் காரணமாக தவித்து வருகிறார். அதனால் அவர் மீது கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. அவருக்கு இந்திய கிரிக்கெட் அணி நிர்வாகம் மேற்கிந்திய தீவுகள் மற்றும் ஜிம்பாப்வே தொடரில் ஓய்வு கொடுத்தது. இந்நிலையில், எதிர்வரும் ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய அணியில் அவர் இடம் பெற்றுள்ளார். நிச்சயம் அவர் இந்த தொடரில் கம்பேக் கொடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

“நான் அவருடன் அண்மையில் பேசவில்லை. இருந்தாலும் பெரிய ஆட்டக்காரர்கள் சரியான நேரத்தில் ஃபார்முக்கு திரும்புவார்கள். அதனை அவரும் செய்வார். ஆசிய கோப்பையில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான முதல் போட்டியில் கோலி அரைசதம் விளாசுவார். அதன் மூலம் விமர்சகர்களின் வாயை அடைப்பார் என நம்புகிறேன். அவருக்கு தேவையானது ஒரே ஒரு தரமான இன்னிங்ஸ் மட்டுமே. அது கிடைத்தால் அனைத்தையும் கடந்து விடுவார்” என ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x