Published : 25 Oct 2016 10:02 AM
Last Updated : 25 Oct 2016 10:02 AM

கேரளா அணிக்கு 2-வது வெற்றி

ஐஎஸ்எல் கால்பந்து தொடரில் நேற்று கோவாவில் நடைபெற்ற ஆட்டத்தில் கேரளா பிளாஸ்டர்ஸ் எப்சி - எப்சி கோவா அணிகள் மோதின. ஆட்டத் தின் 24-வது நிமிடத்தில் கோவா முதல் கோலை அடித்தது. அந்த அணியின் பெலிஸ்பினோ உயரமாக அடித்த பந்தை ஜூலியோ சீசர் தலையால் முட்டி கோல் அடித்தார். இதனால் முதல் பாதியில் கோவா 1-0 என முன்னிலை வகித்தது.

46-வது நிமிடத்தில் கேரளா பதிலடி கொடுத்தது. அந்த அணியின் முகமது ராபி கோல் அடிக்க ஆட்டம் 1-1 என சமநிலையை எட்டியது. ஆட்டம் முடிவடைய 6 நிமிடங்கள் இருந்த நிலையில் கேரளா 2-வது கோலை அடித்தது. இந்த கோலை பெல்போர்ட் அடித்தார். கோவா அணியால் இதற்கு பதிலடி கொடுக்க முடியாமல் போனது. முடிவில் 2-1 என்ற கோல் கணக்கில் கேரளா வெற்றி பெற்றது.

கேரளா அணிக்கு இது 2-வது வெற்றியாக அமைந்தது.தொடரில் இன்று இரவு 7 மணிக்கு கொல்கத்தாவில் நடைபெறும் ஆட்டத்தில் மும்பை சிட்டி எப்சி - அட்லெட்டிகோ டி கொல்கத்தா அணிகள் மோதுகின்றன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x