Published : 07 Aug 2022 06:39 AM
Last Updated : 07 Aug 2022 06:39 AM

செஸ் ஒலிம்பியாட்: 9-ம் தேதியே போட்டி நிறைவு விழா

சென்னை: 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி நிறைவு விழா 9-ம் தேதி சென்னையில் நடைபெறவுள்ளது.

போட்டியின் நிறைவு விழா 10-ம் தேதி நடைபெறுவதாக இருந்தது. இந்நிலையில் 9-ம் தேதியே நிறைவு விழாவை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக விளையாட்டு ஏற்பாட்டு குழுவினர் கூறும்போது, “நிறைவு விழா 9-ம் தேதி மாலை 5.30 முதல் இரவு 8.30 மணி வரை நடைபெற உள்ளது. நேரு உள் விளையாட்டரங்கில் நடைபெறும் விழாவில் சிறப்பு விருந்தினர்களாக இந்திய அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ்.தோனி, 5 முறை உலக செஸ் சாம்பியனுமான விஸ்வநாதன் ஆனந்த் ஆகியோர் பங்கேற்கின்றனர். முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் விழாவில் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு தங்கம், வெள்ளி, வெண்கலப் பதக்கங்கள் வழங்கப்பட உள்ளன” என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x