

ஐபிஎல் தொடரில் இன்று மாலை 4 மணிக்கு மொஹாலியில் நடை பெறும் ஆட்டத்தில் கிங்ஸ்லெவன் பஞ்சாப், சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதுகின்றன.
11 ஆட்டத்தில் 7 வெற்றிகளுடன் 14 புள்ளிகள் பெற்றுள்ள ஐதரா பாத் அணி இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெறும் பட்சத்தில் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை இறுதி செய்துகொள்ள முடியும். டெல்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில் மோசமாக விளையாடிய ஐதராபாத் இன்று விழிப்புடன் செயல்படக்கூடும்.
அதேவேளையில் பஞ்சாப் அணிக்கும் இன்றைய ஆட்டம் முக்கியத்தும் வாய்ந்தது தான். 11 ஆட்டத்தில் 4 வெற்றிகளை பெற் றுள்ள அந்த அணி இன்றைய ஆட்டத்திலும் எஞ்சியுள்ள இரு ஆட்டத்திலும் ஜெயித்தால் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறுவதற் கான வாய்ப்பு உள்ளது.
முரளி விஜய் கேப்டனாக பொறுப்பேற்ற பிறகு பஞ்சாப் அணி போராடும் குணத்துடன் விளையாடி வருகிறது. அந்த அணி தனது கடைசி ஆட்டத்தில் மும்பை அணியை வீழ்த்திய உற்சாகத்தில் உள்ளது.
மும்பை-டெல்லி மோதல்
இரவு 8 மணிக்கு விசாகப்பட் டினத்தில் நடைபெறும் ஆட்டத்தில் மும்பை-டெல்லி அணிகள் மோது கின்றன. நடப்பு சாம்பியனான மும்பை இந்த தொடரில் கடுமையாக திணறி வருகிறது. ரோஹித் சர்மாவை மட்டுமே பேட்டிங்கில் நம்பியிருப்பது பலவீனமாக உள்ளது.
அம்பாட்டி ராயுடு, பொல்லார்டு, பார்த்திவ் படேல், ஜாஸ் பட்லர் உள்ளிட்ட வீரர்கள் சீரான ஆட் டத்தை வெளிப்படுத்த தவறுகின் றனர். மும்பை அணிக்கு இன்றைய ஆட்டத்தையும் சேர்த்து மொத்தம் இரு ஆட்டங்கள் மட்டுமே உள் ளது. 12 புள்ளிகளுடன் உள்ள அந்த அணி பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை பெற வேண்டுமானால் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.
டெல்லி அணி 10 ஆட்டத்தில் 6 வெற்றிகளுடன் 12 புள்ளிகள் பெற்றுள்ளது. அடுத்தடுத்து வெற் றிகளை குவிக்கும் பட்சத்தில் பிளேஆப் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை டெல்லி அணி எளிதாக்கிக்கொள்ள முடியும்.