Last Updated : 07 May, 2016 09:23 AM

 

Published : 07 May 2016 09:23 AM
Last Updated : 07 May 2016 09:23 AM

ஒலிம்பிக்கில் பதக்கம்: பி.வி.சிந்து விருப்பம்

ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வெல்ல விரும்புவதாக பி.வி.சிந்து கூறியுள்ளார்.

இந்தியாவின் முன்னணி பாட்மிண்டன் வீராங்கனைகளில் ஒருவர் பி.வி.சிந்து. உலக பாட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் 2 முறை வெண்கலப் பதக்கம் வென்ற இவர், முதல் முறையாக ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார். இதுபற்றி மும்பையில் நேற்று நிருபர்களிடம் சிந்து கூறியதாவது:

ஒலிம்பிக் போட்டியில் விளையாட நான் தேர்ந்தெடுக் கப்பட்டிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. உலக சாம்பியன் ஷிப் போட்டிகளில் 2 முறை வெண்கலப் பதக்கம் வென்றிருந் தாலும் ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்ல விரும்புகிறேன். ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்வது தான் ஒவ்வொரு வீரருக்கும் கனவாக இருக்கும். எனக்கும் அப்படித்தான்.

ரியோ ஒலிம்பிக்கில் பேட்மிண்டன் பிரிவில் விளையாட இந்தியாவில் இருந்து 7 பேர் தேர்ந் தெடுக்கப்பட்டிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. நாங்கள் அனை வரும் ஒலிம்பிக் போட்டிக்காக தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள் ளோம். ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்ல உடலளவிலும் மனதள விலும் நாங்கள் தயாராக இருக்க வேண்டும். இதில் கலந்து கொள்ளும் ஒவ்வொரு வீரர் களும் மிகச் சிறந்தவர்களாக இருப்பார்கள் என்பதில் சந்தேக மில்லை. அவர்களை எதிர் கொள்ள நாங்கள் தயாராக இருக்கவேண்டும். ஒலிம்பிக்கில் கலந்துகொள்ளும் நம் வீரர்கள் அனைவருக்கும் எனது வாழ்த் துகள்.

இவ்வாறு பி.வி.சிந்து கூறினார்.





FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x