Published : 11 Jun 2022 06:28 PM
Last Updated : 11 Jun 2022 06:28 PM
சென்னை: நார்வே குரூப் ஏ ஓபன் செஸ் தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற இந்தியாவின் இளம் கிராண்ட்மாஸ்டர் தமிழகத்தைச் சேர்ந்த பிரக்ஞானந்தாவிற்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
நார்வேயில் நடந்த குரூப் ஏ ஓபன் செஸ் போட்டித் தொடரில் இந்தியாவின் இளம் கிராண்ட்மாஸ்டரும் தமிழகத்தைச் சேர்ந்த பிரக்ஞானந்தா சாம்பியன் பட்டம் வென்றார். இந்நிலையில், பிரக்ஞானந்தாவிற்கு வாழ்த்து முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், "சில மாத இடைவெளியில் உலகின் நம்பர் 1 வீரரான மேக்னஸ் கார்ல்சனை இரு முறை வீழ்த்தி, உலகை வியப்பில் ஆழ்த்திய நம் சென்னைச் சிறுவன் பிரக்ஞானந்தா, தற்போது நார்வே செஸ் தொடரில் வென்று மீண்டும் இந்தியாவுக்கே புகழ் சேர்த்துள்ளார். வெற்றிகளும் புகழ்மாலைகளும் மென்மேலும் குவியட்டும்!" என்று அந்தப் பதிவில் கூறியுள்ளார்.
சில மாத இடைவெளியில் உலகின் நம்பர் 1 வீரரான மேக்னஸ் கார்ல்சனை இரு முறை வீழ்த்தி, உலகை வியப்பில் ஆழ்த்திய நம் சென்னைச் சிறுவன் @rpragchess, தற்போது #NorwayChess தொடரில் வென்று மீண்டும் இந்தியாவுக்கே புகழ் சேர்த்துள்ளார்.
— M.K.Stalin (@mkstalin) June 11, 2022
வெற்றிகளும் புகழ்மாலைகளும் மென்மேலும் குவியட்டும்! https://t.co/fGt7NJGeNq
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT