Published : 09 Jun 2022 06:20 AM
Last Updated : 09 Jun 2022 06:20 AM

தென் ஆப்பிரிக்க தொடர்: டி20-ல் சாதனை படைக்குமா இந்தியா?

புதுடெல்லி: இந்தியா - தென் ஆப்பிரிக்க அணிகள் இடையிலான 5 டி20 ஆட்டங்கள் கொண்ட கிரிக்கெட் தொடரின் முதல் ஆட்டம் டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் இன்று இரவு 7 மணிக்கு நடைபெறுகிறது.

ரோஹித் சர்மா, விராட் கோலி, ஜஸ்பிரீத் பும்ரா, மொகமது ஷமி உள்ளிட்ட சீனியர் வீரர்களுக்கு ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது. கே.எல்.ராகுல் காயம் காரணமாக விலகி உள்ளதால் ரிஷப் பந்த் தலைமையில் இந்திய அணி களமிறங்குகிறது. மீண்டும் அணிக்கு திரும்பியுள்ள தினேஷ் கார்த்திக், ஹர்திக் பாண்டியா, யுவேந்திர சாஹல் மற்றும் இளம் வீரர்கள் மீது எதிர்பார்ப்பு உள்ளது.

டி20 கிரிக்கெட்டில் இந்திய அணி தொடர்ச்சியாக 12 ஆட்டங்களில் வெற்றி பெற்றுள்ளது. இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெறும்பட்சத்தில் தொடர்ச்சியாக 13 வெற்றிகளை குவித்த முதல் அணி என்ற சாதனையை நிகழ்த்தும். இந்த வகையில் ஆப்கானிஸ்தான், ருமேனியா அணிகள் தலா 12 ஆட்டங்களில் தொடர்ச்சியாக வெற்றியை பதிவு செய்திருந்தன. இந்த சாதனையை கடந்த பிப்ரவரியில் இந்திய சமன் செய்திருந்தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x