Published : 06 May 2016 06:18 PM
Last Updated : 06 May 2016 06:18 PM

சச்சினுடன் ஒப்பிட விராட் கோலி இன்னும் கடுமையாக உழைக்க வேண்டும்: யுவராஜ் சிங் கருத்து

சச்சின் டெண்டுல்கரின் சாதனைகளை முறியடிப்பது கடினம், சச்சினுடன் ஒப்பிடப்படுவதற்கு விராட் கோலி இன்னும் நெடுந்தொலைவு செல்ல வேண்டியுள்ளது என்று யுவராஜ் சிங் தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் தனியார் தொலைக்காட்சி ஒன்றில் யுவராஜ் சிங் கூறிய போது, “100 சதங்கள் என்பது சிந்திப்பதற்கே நெடுந்தூரத்தில் உள்ள சாதனையாகும். சச்சின் டெண்டுல்கர் ஒரு கிரேட் பிளேயர், இந்தியாவின் தூதர், எனவே விராட் கோலியை சச்சினுடன் ஒப்பிட வேண்டுமெனில் அதற்கு விராட் கோலி இன்னும் கடுமையாக உழைத்து நெடுந்தூரம் செல்ல வேண்டியுள்ளது.

சச்சின் டெண்டுல்கரின் கிரிக்கெட் சாதனைகளை ஒப்பிடப்பட முடியாதது. அவரது பாரம்பரியம் நீண்ட நாட்களுக்கு நீடிப்பதாகும். அவர் எட்டிய உச்சத்தை எட்ட எந்த ஒரு வீரரும் கடுமையான உழைப்பை மேற்கொள்ள வேண்டும்.

விராட் கோலி இப்போது சரியான ஃபார்மில் உள்ளார். இவரது தலைமுறை வீரர்களில் கோலி, டிவில்லியர்ஸ் ஆகியோர் சிறந்த பேட்ஸ்மென்கள். எனவே ஒருநாள் விராட் கோலியும் கிரேட் பிளேயராக உருவெடுப்பார் என்று நம்புகிறேன்” என்றார் யுவராஜ் சிங்.

நடப்பு ஐபிஎல் கிரிக்கெட்டில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக நடப்பு ஐபிஎல் தொடரில் முதல் போட்டியில் யுவராஜ் களமிறங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x