Published : 03 Jun 2022 07:03 AM
Last Updated : 03 Jun 2022 07:03 AM

பைனலிசிமா கோப்பையை வென்றது அர்ஜென்டினா

லண்டன்: தென் அமெரிக்க, ஐரோப்பிய சாம்பியன் அணிகளுக்கு இடையே கடந்த சில ஆண்டுகளாக பைனலிசிமா கோப்பைக்கான போட்டி நடத்தப்பட்டு வருகிறது. இந்த வகையில் 3-வது ஆண்டுக்கான போட்டியில் நேற்று முன்தினம் அர்ஜென்டினா - இத்தாலி மோதின.

லண்டனில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் அர்ஜென்டினா 3-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று கோப்பையை வென்றது. 28-வது நிமிடத்தில் லாடரோ மார்டினெஸ், 45-வது நிமிடத்தில் ஏஞ்சல் டி மரியா, 94-வது நிமிடத்தில் பவ்லோ டைபலா ஆகியோர் கோல் அடித்து அசத்தினர். இதில் இரு கோல்களை அடிக்க உதவியிருந்த லயோனல் மெஸ்ஸி, சிறந்த வீரராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x