Published : 13 May 2016 06:02 PM
Last Updated : 13 May 2016 06:02 PM
ஐசிசி கிரிக்கெட் குழுவின் தலைவராக அனில் கும்ப்ளே மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவர் இந்தப் பொறுப்பில் மூன்று வருடங்கள் நீடிப்பார்.
இந்த குழுவின் உறுப்பினர்களாக டிராவிட், ஜெயவர்தனே, டிம் மே ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்கள். சங்கக்கரா, எல். சிவராமகிருஷ்ணன், மார்க் டெய்லர் ஆகியோருக்குப் பதிலாக இந்த மூவரும் தேர்வாகியுள்ளார்கள். இந்த குழுவில் நடுவர் ரிச்சர்ட் கெட்டல்பரோவும் இடம் பெற்றுள்ளார்.
கிரிக்கெட் விதிமுறைகளில் மாற்றம் கொண்டுவருவதற்கான பரிந்துரைகளை கிரிக்கெட் குழு மேற்கொள்ளும். கும்ப்ளே இந்த பதவிக்கு முதன்முறையாக கடந்த 2012-ம் ஆண்டு தேர்வாகியிருந்தார். தற்போது 2-வது முறையாக நியமிக்கப்பட்டுள்ள அவர் 2018 வரை இந்த பதவியில் நீடிப்பார்.
உறுப்பினர்களுக்கான பதவிக்காலமும் 3 ஆண்டுகள் தான். கும்ப்ளே தலைமையிலான குழுவின் முதல் ஆலோசனைக்கூட்டம் வரும் 31-ம் தேதி முதல் இரு நாட்கள் லார்ட்ஸ் நகரில் நடைபெறுகிறது. ஜூன் 3-வது வாரத்தில் ஐசிசி-யின் வருடாந்திர மாநாடு ஸ்காட்லாந்தில் உள்ள எடின்பர்க் நகரில் நடைபெற உள்ள நிலையில் கிரிக்கெட் குழுவினர் ஆலோசனை நடத்த உள்ளது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT