Published : 21 May 2016 11:01 AM
Last Updated : 21 May 2016 11:01 AM
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் நேற்று முன் தினம் கான்பூரில் நடைபெற்ற ஆட்டத்தில் 6 விக்கெட் வித்தியா சத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியைத் தோற்கடித்தது குஜராத் லயன்ஸ் அணி. இதன் மூலம் அந்த அணி பிளே ஆப் சுற்று வாய்ப்பையும் நெருங்கியுள்ளது.
முதலில் பேட் செய்த கொல்கத்தா அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 124 ரன்கள் எடுத்தது. யூசுப் பதான் 36, ராபின் உத்தப்பா 25, சூர்யகுமார் யாதவ் 17 ரன்கள் எடுத்தனர். காம்பீர் 8 ரன் எடுத்த நிலையில் ரன் அவுட் ஆனார். குஜராத் அணியின் டிவைன் ஸ்மித் 4 ஓவர்கள் வீசி 8 ரன்கள் மட்டுமே விட்டு கொடுத்து 4 முக்கிய விக்கெட்களை வீழ்த்தினார்.
எளிதான இலக்குடன் களம் புகுந்த குஜராத் அணி 13.3 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 125 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. கேப்டன் சுரேஷ் ரெய்னா 36 பந்துகளில் 1 சிக்ஸர், 7 பவுண்டரிகளுடன் 53 ரன்கள் சேர்த்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.
டிவைன் ஸ்மித் 0, மெக்கலம் 6, தினேஷ் கார்த்திக் 12, ஆரோன் பின்ச் 26 ரன்களில் ஆட்டமிழந்தனர். ஜடேஜா 11 ரன்கள் சேர்த்தார். ஆட்ட நாயகனாக டிவைன் ஸ்மித் தேர் வானார். 13 ஆட்டத்தில் விளையாடி உள்ள குஜராத் அணிக்கு இது 8-வது வெற்றியாக அமைந்தது.
இந்த வெற்றியால் 16 புள்ளிகளுடன் அந்த அணி பிளே ஆப் சுற்றை நெருங்கியுள்ளது. அதேவேளையில் 6-வது தோல்வியை சந்தித்த கொல்கத்தா அணிக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
14 புள்ளிகளுடன் உள்ள அந்த அணி தனது கடைசி ஆட்டத்தில் நாளை ஐதராபாத் அணியை எதிர்கொள்கிறது. இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்றால் மட்டுமே கொல்கத்தா அணி பிளே ஆப் சுற்றுக்கு முன்னேற வாய்ய்பு கிடைக்கும்.
வெற்றி குறித்து குஜராத் கேப்டன் ரெய்னா கூறும்போது, "டிவைன் ஸ்மித் சிறப்பாக பந்து வீசினார். அவர் ஒரு பேட்ஸ்மேன் மட்டுமல்ல, சிறந்த ஆல் ரவுண்டர் என்பதையும் நான் உணர்வேன். எளிதான வெற் றியை அவர் எங்களுக்கு அமைத்துக் கொடுத்தார். மும்பைக்கு எதிராக அடுத்த ஆட்டத்திலும் சிறப்பாக விளையாட வேண்டியது அவசியம்" என்றார்.
கொல்கத்தா கேப்டன் காம்பீர் கூறும்போது, "நாங்கள் 150 முதல் 160 ரன் வரை எடுத்து இருக்க வேண்டும். 124 ரன் மட்டுமே எடுத்து விட்டு எதிரணியை கட்டுப்படுத்துவது கடினம்" என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT