Published : 27 May 2022 06:46 AM
Last Updated : 27 May 2022 06:46 AM

நீளம் தாண்டுதலில் தங்கம் வென்றார் ஸ்ரீசங்கர்

புதுடெல்லி: கிரீஸ் நாட்டின் ஏதேன்ஸில் உள்ள கலிதியா நகரில் சர்வதேச நீளம் தாண்டுதல் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் ஆடவர் பிரிவில் இந்தியாவின் முரளி ஸ்ரீசங்கர் 8.31 மீட்டர் நீளம் தாண்டி தங்கப் பதக்கம் வென்றார். இதனை அவர், தனது 3-வது முயற்சியில் தாண்டியிருந்தார். முதல் இரு முயற்சியிலும் ஸ்ரீசங்கர் முறையே 7.88 மற்றும் 7.71 மீட்டர் நீளமும் 4-வது முயற்சியில் 7.79 மீட்டர் நீளமும் தாண்டியிருந்தார். கடைசி இரு முயற்சியும் பவுலாகியிருந்தது.

உலக உள்ளரங்க விளையாட்டில் வெள்ளிப் பதக்கம் வென்ற சுவீடனின் தோபியாஸ் மான்ட்லர் 8.27 மீட்டர் நீளம் தாண்டி வெள்ளிப் பதக்கமும், பிரான்ஸின் ஜூல்ஸ் பொம்மெரி 8.17 மீட்டர் நீளம் தாண்டி வெண்கலப் பதக்கமும் கைப்பற்றினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x