Published : 22 May 2022 08:20 AM
Last Updated : 22 May 2022 08:20 AM

2-ம் முறை உலக சாம்பியனை வீழ்த்தினார் பிரக்ஞானந்தா

பிரக்ஞானந்தா

புதுடெல்லி: செசபிள் மாஸ்டர்ஸ் ரேபிட் செஸ் போட்டி ஆன்லைனில் நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரில் தமிழகத்தின் சென்னையைச் சேர்ந்த பிரக்ஞானந்தா 5-வது சுற்றில் நேற்று முன்தினம் உலக சாம்பியனும் முதல் நிலை வீரருமான நார்வே நாட்டைச் சேர்ந்த மேக்னஸ் கார்ல்சனை எதிர்த்து விளையாடினார்.

ஆட்டம் டிராவை நோக்கிசென்று கொண்டிருந்த நிலையில் கார்ல்சன் தனது 40-வது நகர்வை தவறுதலாக நகர்த்தினார். இதை சாதகமாக்கி கார்ல்சனை தோற்கடித்தார் பிரக்ஞானந்தா. 5 சுற்றுகளின் முடிவில்16 வயதான இந்திய கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தா 12 புள்ளிகளுடன் 5-வது இடத்தில் உள்ளார். கார்ல்சன் 15 புள்ளிகளுடன் 2-வது இடத்தில் உள்ளார். சீனாவின் வெய் யி 18 புள்ளிகளுடன் முதலிடம் வகிக்கிறார்.

கடந்த பிப்ரவரியில் நடைபெற்ற போட்டியிலும் பிரக்ஞானந்தா, கார்ல்சனை வீழ்த்தியிருந்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x