Published : 20 May 2022 05:03 AM
Last Updated : 20 May 2022 05:03 AM

தாய்லாந்து ஓபன் கால் இறுதியில் சிந்து

பாங்காக்: தாய்லாந்து ஓபன் பாட்மிண்டன் தொடரில் இந்தியாவின் பி.வி.சிந்து கால் இறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

தாய்லாந்தின் பாங்காக் நகரில் நடைபெற்று வரும் இந்தத் தொடரில் மகளிர் ஒற்றையர் பிரிவு 2-வது சுற்றில் உலகத் தரவரிசையில் 7-வது இடத்தில் உள்ள இந்தியாவின் பி.வி.சிந்து, 46-வது இடத்தில் உள்ள கொரியாவைச் சேர்ந்த சிம் யு ஜின்னை எதிர்த்து விளையாடினார். இதில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய சிந்து 21-16, 21-13 என்ற நேர் செட்டில் வெற்றி பெற்றார். இந்த ஆட்டம் 37 நிமிடங்களில் முடிவடைந்தது. இன்று நடைபெறும் கால் இறுதி சுற்றில் சிந்து, உலகத் தரவரிசையில் 2-வது இடத்தில் உள்ள ஜப்பானின் அகானே யமகுச்சியுடன் மோதுகிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x