

கோவில்பட்டியில் நடைபெறும் லட்சுமி அம்மாள் நினைவு அகில இந்திய ஹாக்கி போட்டியில் நேற்று நடைபெற்ற முதல் காலிறுதிப் போட்டியில் மும்பை ஆர்.சி.எப். அணியுடன் ஹாக்கி பெங்களூர் அணி மோதியது.
இப்போட்டியில மும்பை ஆர்.சி.எப். அணி 2 - 1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறியது.
மற்றொரு காலிறுதியில் சென்னை ஐ.ஓ.பி. அணி 1 - 0 என்ற கோல் கணக்கில் கோவில்பட்டி லட்சுமி அம்மாள் நினைவு ஹாக்கி அணியை வீழ்த்தி அரையிறுதியில் நுழைந்தது.