Published : 01 Apr 2016 09:29 AM
Last Updated : 01 Apr 2016 09:29 AM

இறுதிப்போட்டியில் நுழைந்தது மேற்கிந்தியத் தீவுகள் மகளிரணி: வரும் 3-ம் தேதி ஆஸி.யுடன் மோதல்

மகளிர் டி 20 உலகக் கோப்பை இரண்டாவது அரையிறுதி ஆட்டத் தில் நியூஸிலாந்து அணியை 6 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி மேற்கிந்தியத் தீவுகள் அணி இறு திப்போட்டிக்கு முன்னேறியது.

மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த மேற்கிந்தியத் தீவுகள் மகளிரணி 6 விக்கெட் இழப்புக்கு 143 ரன்கள் குவித்தது. பிரிட்னி கூப்பர் 48 பந்தில், 2 சிக்ஸர், 5 பவுண்டரிகளுடன் 61 ரன் விளாசினார். டெய்லர் 25, டாட்டின் 20, மேத்யூஸ் 16 ரன் எடுத்தனர். நியூஸிலாந்து தரப்பில் தேவின் 4 விக்கெட் வீழ்த்தினார்.

144 ரன்கள் இலக்குடன் பேட் செய்த நியூஸிலாந்து மகளிரணி 17 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 114 ரன்கள் சேர்த்தது. பேட்ஸ் 12, பிரிஸ்ட் 6, தேவின் 22, ஷாட்டர் வெயிட் 24, மெஹ்கிலாஸன் 38 ரன்கள் ஆட்டமிழந்தனர். கடைசி 3 ஓவர்களில் வெற்றிக்கு 30 ரன்கள் தேவைப்பட்டன.

18-வது ஓவரில் 1 விக்கெட்டை இழந்து 5 ரன்னும், 19-வது ஓவரில் மேலும் ஒரு விக்கெட்டை இழந்து 6 ரன்களை சேர்க்க கடைசி 6 பந்தில் 19 ரன்கள் தேவை என்ற நெருக்கடி உருவானது. டாட்டின் வீசிய இந்த ஓவரில் நியூஸிலாந்து அணிக்கு 12 ரன்கள் மட்டுமே கிடைத்தன.

முடிவில் நியூஸிலாந்து அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 137 ரன்கள் எடுத்தது. கெய்ட்டி 11 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். மேற்கிந்தியத் தீவுகள் தரப்பில் ஸ்டெபானி 3 விக்கெட் வீழ்த்தினார். ஆட்ட நாயகியாக பிரிட்னி கூப்பர் தேர்வானார்.

6 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற மேற்கிந்தியத் தீவுகள் மகளிரணி இறுதிப் போட்டிக்கு முன்னேறி யது. வரும் 3-ம் தேதி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெறும் இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியாவை சந்திக்கிறது மேற்கிந்தியத் தீவுகள் அணி. இந்த ஆட்டம் பிற்பகல் 2.30 மணிக்கு நடைபெறுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x