Published : 01 Apr 2016 09:29 AM
Last Updated : 01 Apr 2016 09:29 AM
மகளிர் டி 20 உலகக் கோப்பை இரண்டாவது அரையிறுதி ஆட்டத் தில் நியூஸிலாந்து அணியை 6 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி மேற்கிந்தியத் தீவுகள் அணி இறு திப்போட்டிக்கு முன்னேறியது.
மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த மேற்கிந்தியத் தீவுகள் மகளிரணி 6 விக்கெட் இழப்புக்கு 143 ரன்கள் குவித்தது. பிரிட்னி கூப்பர் 48 பந்தில், 2 சிக்ஸர், 5 பவுண்டரிகளுடன் 61 ரன் விளாசினார். டெய்லர் 25, டாட்டின் 20, மேத்யூஸ் 16 ரன் எடுத்தனர். நியூஸிலாந்து தரப்பில் தேவின் 4 விக்கெட் வீழ்த்தினார்.
144 ரன்கள் இலக்குடன் பேட் செய்த நியூஸிலாந்து மகளிரணி 17 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 114 ரன்கள் சேர்த்தது. பேட்ஸ் 12, பிரிஸ்ட் 6, தேவின் 22, ஷாட்டர் வெயிட் 24, மெஹ்கிலாஸன் 38 ரன்கள் ஆட்டமிழந்தனர். கடைசி 3 ஓவர்களில் வெற்றிக்கு 30 ரன்கள் தேவைப்பட்டன.
18-வது ஓவரில் 1 விக்கெட்டை இழந்து 5 ரன்னும், 19-வது ஓவரில் மேலும் ஒரு விக்கெட்டை இழந்து 6 ரன்களை சேர்க்க கடைசி 6 பந்தில் 19 ரன்கள் தேவை என்ற நெருக்கடி உருவானது. டாட்டின் வீசிய இந்த ஓவரில் நியூஸிலாந்து அணிக்கு 12 ரன்கள் மட்டுமே கிடைத்தன.
முடிவில் நியூஸிலாந்து அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 137 ரன்கள் எடுத்தது. கெய்ட்டி 11 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். மேற்கிந்தியத் தீவுகள் தரப்பில் ஸ்டெபானி 3 விக்கெட் வீழ்த்தினார். ஆட்ட நாயகியாக பிரிட்னி கூப்பர் தேர்வானார்.
6 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற மேற்கிந்தியத் தீவுகள் மகளிரணி இறுதிப் போட்டிக்கு முன்னேறி யது. வரும் 3-ம் தேதி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெறும் இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியாவை சந்திக்கிறது மேற்கிந்தியத் தீவுகள் அணி. இந்த ஆட்டம் பிற்பகல் 2.30 மணிக்கு நடைபெறுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT