Last Updated : 02 Apr, 2016 09:23 AM

 

Published : 02 Apr 2016 09:23 AM
Last Updated : 02 Apr 2016 09:23 AM

சுழற்பந்து வீச்சில் நோபாலை ஏற்க முடியாது: சுனில் கவாஸ்கர் ஆதங்கம்

டி 20 உலகக் கோப்பை அரையிறுதியில் முக்கியமான கட்டத்தில் நோபால்கள் வீசிய இந்திய பந்து வீச்சாளர்களை விமர்சித்துள்ள முன்னாள் வீரர் கவாஸ்கர், சுழற்பந்து வீச்சாளர் நோபால் வீசுவதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது என தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் கூறிய தாவது: சுழற்பந்து வீச்சாளர்கள் உண்மையிலேயே நோபால் வீசுவார்கள் என்று எதிர்பார்க்க முடியாது. வேகப்பந்து வீச்சா ளர்கள் யார்க்கர் அல்லது பவுன்சர் வீசும் போது சில சமயங் களில் நோபாலாக மாறக்கூடும். ஆனால் சுழற்பந்து வீச்சாளர் நோபால் வீசுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. அப்படியென்றால் வலை பயிற்சியில் ஏதோ பிரச்சினை உள்ளது என்றே அர்த்தம்.

மேற்கிந்தியத் தீவுகள் அணி தனிப்பட்ட ஒரு வீரரை சார்ந்த அணி கிடையாது. நாம் கெய்லையும், விராட் கோலியை மட்டுமே ஒப்பிட்டு பேசினோம். ஆனால் கெய்ல் ரன் குவிக்கவில்லை. ஆனால் மற்ற வீரர்கள் சிறந்த பங்களிப்பை அளித்துள்ளனர். கிரிக்கெட் எப்போது ஒரு குழு விளையாட்டு.

நாம் ஒன்று அல்லது இரு வீரர்களை மட்டுமே உயர்த்தி பேசுகிறோம். ஆனால் கிரிக்கெட் என்பது தனிப்பட்ட ஒரு வீரரின் ஆட்டம் கிடையாது, இதை மேற்கிந்தியத் தீவுகள் அணி நிருபித்துள்ளது.

வெற்றியின் பெருமை மேற் கிந்தியத் தீவுகள் அணிக்கே சேரும். கிடைத்த எல்லா வாய்ப்புகளையும் அவர்கள் சரியாக பயன்படுத்திக் கொண்டனர். பேட்டிங்கில் மிகவும் புத்திசாலித்தனமாக விளையாடினர்.

இந்திய அணி 20 ரன்கள் குறைவாக எடுத்து விட்டதாகவே நான் நினைக்கிறேன். கூடுதலாக 20 ரன்கள் சேர்ப்பது என்பது சாத்தியமான விஷயம்தான். நல்ல தொடக்கம் கிடைத்த போதிலும் சிறந்த பேட்டிங் வரிசை, ரன்குவிப்புக்கான சிறந்த ஆடுகளம் அமைந்த நிலையில் ஓவருக்கு 8 ரன்கள் மட்டுமே சேர்த்தது எதிர்பார்க்காத ஒன்று தான். நல்ல பார்மில் வீரர்கள் இருக்கும் நிலையில் ஓவருக்கு 10 ரன்களுக்கு மேல் குவித்திருக்க வேண்டும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x