Published : 01 Apr 2016 09:28 AM
Last Updated : 01 Apr 2016 09:28 AM
பாகிஸ்தானில் ஏப்ரல் 15-ம் தேதி முதல் மே 8-ம் தேதி வரை சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் போட்டி மற்றும் பாகிஸ்தான் ஏ அணியுடன் நான்கு நாள் போட்டியில் விளை யாட ஆப்கானிஸ்தான் அணி திட்டமிட்டிருந்தது. போட்டிகளை லாகூர், கராச்சியில் நடத்தவும் முடிவு செய்யப்பட்டு இது தொடர்பாக இரு நாட்டு கிரிக் கெட் வாரியங்களுக்கு இடை யில் பேச்சுவார்த்தை நடை பெற்று வந்தது.
இந்நிலையில் லாகூரில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடை பெற்ற வெடிகுண்டு தாக்குதலில் 70 பேர் பலியானதை தொடர்ந்து பாதுகாப்பு தொடர்பாக பிரச்சனை எழுந்துள்ளது. இதனால் ஆப்கானிஸ்தான் கிரிக் கெட் வாரியத்துடன் நடை பெற்று வந்த பேச்சுவார்த் தையை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் நிறுத்திவைத்துள்ளது.
பாதுகாப்பு காரணங்களால் இந்த கிரிக்கெட் தொடர் தற்போ தைக்கு நிறுத்தி வைக்கப்பட் டுள்ளதாக பாகிஸ்தான் வாரிய அதிகாரி அஜ்மத் பாத்தி தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT