Last Updated : 28 Apr, 2016 09:17 AM

 

Published : 28 Apr 2016 09:17 AM
Last Updated : 28 Apr 2016 09:17 AM

ஆசிய பாட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி: 2-வது சுற்றில் சாய்னா, சிந்து

ஆசிய பாட்மிண்டன் சாம்பியன் ஷிப் போட்டியில் இந்திய வீராங் கனைகள் சாய்னா நெவால், பி.வி.சிந்து ஆகியோர் 2-வது சுற்றுக்கு முன்னேறினர்.

சீனாவின் வூஹான் நகரில் நடை பெற்று வரும் இந்த போட்டியில் உலக தரவரிசையில் 8-வது இடத்தில் உள்ள சாய்னா, இந்தோ னேஷியவின் பிட்ரியானியை 21-16, 21-17 என்ற நேர் செட்டிலும் தோற்கடித்தார்.

தரவரிசையில் 10-வது இடத் தில் உள்ள சிந்து மற்றொரு இந்தோனேஷிய வீராங்கனை யான மரியா பிபீ ஹஸூமஸ்டுடியை 21-10, 21-13 என்ற கணக்கில் வீழ்த்தினார். இந்த ஆட்டம் சுமார் 30 நிமிடங்கள் நடைபெற்றது.

2-வது சுற்றில் சாய்னா தரவரிசை யில் 27-வது இடத்தில் உள்ள தாய்லாந்தின் ஜிந்தாபோலை எதிர் கொள்கிறார். அதேவேளையில் சிந்து, சீன தைபேவை சேர்ந்த டாய் ஜூ யங்கை சந்திக்கிறார். தர வரிசையில் டாய் 9-வது இடத்தில் உள்ளார்.

ஆடவர் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் காந்த் 21-13, 12-21, 19-21 என்ற செட் கணக்கில் கொரியாவின் லீ டாங்கிடம் அதிர்ச்சி தோல்வியடைந்தார்.

மகளிர் மற்றும் ஆடவர் இரட்டையர் பிரிவில் இந்திய ஜோடிகள் தோல்வியை சந்தித்தது. மகளிர் பிரிவில் ஜூவாலா கட்டா, அஸ்வினி பொன்னப்பா ஜோடி 15-21, 11-21 என்ற நேர்செட்டில் கொரியாவின் ஸங் யி நா, லீ ஜோ ஹூ ஜோடியிடம் வீழ்ந்தது.

ஆடவர் பிரிவில் மனு அட்ரி, சுமித் ரெட்டி ஜோடி 15-21, 13-21 என்ற நேர் செட்டில் தரவரிசையில் 5-வது இடத்தில் உள்ள ஜப்பானின் ஹிரோயுகி என்டோ, கெனிச்சி ஹயஹவா ஜோடியிடமும் பிரணவ் ஜெர்ரி சோப்ரா, அக்ஸய் திவால்கர் ஜோடி 19-12, 17-21 என்ற கணக்கில் ஹாங்காங்கின் ஆர் ஷின் ஸங், டங் ஹூன் மான் ஜோடியிடமும் தோல்வியடைந்தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x