Published : 02 Mar 2016 09:29 AM
Last Updated : 02 Mar 2016 09:29 AM
மாநில அளவில் நடந்த சதுரங்கப் போட்டியில், திருப்பூர் காதுகேளாதோர் பள்ளி மாணவ, மாணவியர் வெற்றி பெற்று, தேசியப்போட்டிக்கு தகுதி பெற்றனர்.
மத்தியபிரதேச மாநிலத்தில், 18-வது தேசிய அளவிலான காது கேளாதோருக்கான சதுரங்கப்போட்டி நாளை முதல் முதல் 7-ம் தேதி வரை நடைபெற உள்ளது. தமிழக அணி சார்பில் திருப்பூர், சென்னை, கன்னியாகுமரியை சேர்ந்த 10 வீரர்கள் பங்கேற்கின்றனர். இவர்கள் கடந்த மாதம் சென்னையில் நடைபெற்ற மாநில அளவிலான போட்டி வாயிலாக தேர்வு செய்யப்பட்டனர்.
மாநிலப்போட்டியில் திருப்பூர் மாவட்டம் சார்பில் திருப்பூர் காதுகேளாதோர் பள்ளி மாணவியர் நந்தினி, அம்சவேணி, சந்தியா மற்றும் மாணவன் சாந்தனு ஆகிய 4 பேர் அபாரமாக விளையாடி தேசிய போட்டிக்கு தகுதி பெற்றனர். தேசிய போட்டியில் வெற்றி பெறுவோர், உலக அளவில் நடக்கும் காது கேளாதோருக்கான செஸ் போட்டியில் பங்கேற்பார்கள்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT