Published : 13 Mar 2016 12:48 PM
Last Updated : 13 Mar 2016 12:48 PM
டி 20 உலக கோப்பையில் சவாலை எதிர்கொள்ள தயாராக இருப்பதாகவும் ஐபிஎல் அனுபவம் உதவும் என ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் கொல்கத்தாவில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:
உலக கோப்பையில் டி 20 டிராபி மட்டும் தான் எங்களிடம் இருந்து தப்பித்துள்ளது. நாங்கள் எல்லா ஆட்டத்திலும், தொடரிலும் வெற்றி பெற விரும்புகிறோம். எங்கள் அணி சிறப்பாக உள்ளது. டி 20 உலக கோப்பையில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய 15 வீரர்கள் அணியில் உள்ளனர். தென் ஆப்பிரிக்காவில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி தொடரை வென்றுள்ளோம். வீரர் களின் ஆட்டத் திறனில் முன்னேற் றம் ஏற்பட்டுள்ளதால் நல்ல பார்மில் இருக்கிறோம்.
எங்களது திறனை நாங்கள் நிச்சயமாக வெளிப்படுத்துவோம். நாங்கள் சிறப்பாக செயல்படும் பட்சத்தில் எங்களை வீழ்த்துவது கடினமாக இருக்கும். அணியில் அதிக அளவிலான ஆல் ரவுண் டர்கள் உள்ளனர். தற்போதைய சூழ்நிலையில் அவர்கள் சிறப்பாக பந்து வீசி வருவதுடன் வலுவான பேட்டிங்கையும் கொண்டுள்ளனர்.
இந்தியாவில் அதிக அளவி லான ஐபிஎல் போட்டிகளில் பங்கேற் றுள்ளோம். அதனால் இங்குள்ள சூழ்நிலைகள் பற்றி தெரியும். நாங்கள் சவாலை எதிர்கொள்ள தயாராக உள்ளோம்.
தொடரை வெற்றிகரமாக தொடங்குவது மிகவும் முக்கியமானது. கடந்த காலங்களில் இந்தியாவுக்கு எதிராக சிறப்பாக விளையாடி வந்துள்ளேன். மீண்டும் அதே போன்று ஆட்டம் அமைந்தால் சிறப்பானதாக இருக்கும். சமீபத்தில் ஆடிய சில ஆட்டங்களில் நல்ல முறையில் ரன் சேர்த்தேன். அதனை இந்த தொடரிலும் எடுத்து செல்வேன் என்ற நம்பிக்கை உள்ளது.
இவ்வாறு ஸ்டீவ் ஸ்மித் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT