Published : 27 Dec 2021 07:15 PM
Last Updated : 27 Dec 2021 07:15 PM

கவாஸ்கருக்கு அடுத்து இனி ராகுல்தான்: சேவாக்கின் மைல்கல் முறியடிப்பு


செஞ்சூரியனில் நடந்து வரும் தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான முதலாவதுடெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் கே.எல்.ராகுல் சதம்அடித்து, வீரேந்திர சேவாக்கின் சாதனையை முறியிடித்துள்ளார்.

செஞ்சூரியனில் இந்தியா, தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடரின் முதல் போட்டி நடந்து வருகிறது. முதல்நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 3 விக்கெட் இழப்புக்கு 272 ரன்கள் சேர்த்துள்ளது. கே.எல்.ராகுல் 248 பந்துகளில் 122 ரன்களுடனும், ரஹானே81 பந்துகளில் 40 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

கே.எல்.ராகுல் ஆசியாவுக்கு வெளியே அடிக்கும் 5-வது சதம், டெஸ்ட் போட்டிகளில்அடிக்கும் 7-வது சதம் இதுவாகும். தான் களமிறங்கிய வெளிநாடுகளில் எல்லாம் ராகுல் சதம் அடித்து வருகிறார். இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, நியூஸிலாந்து, தென் ஆப்பிரிக்கா, இலங்கை, மே.இ.தீவுகள், ஜம்பாப்பே ஆகிய நாடுகளுக்கு எதிராக ராகுல் சதம்அடித்துவிட்டார்.

முதல் விக்கெட்டுக்கு மயங்க் அகர்வாலுடன் சேர்ந்து 177 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த ராகுல், கேப்டன் கோலியுடன் சேர்ந்து 82 ரன்கள் சேர்த்தார். தற்போது ரஹானேவுடன் சேர்ந்து 73 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து விளையாடி வருகிறார்.

முதல் விக்கெட்டுக்கு இருவரும் 117 ரன்கள் சேர்த்தனர். 2010ம் ஆண்டுக்குப்பின் இந்திய தொடக்க ஜோடி முதல் விக்கெட்டுக்கு சதம் அடிப்பது இதுதான் முதல் முறையாகும். அதுமட்டுமல்லாமல்தென் ஆப்பிரிக்காவில் இந்திய தொடக்க ஜோடி சதம் அடித்தது இது 3-வது முறையாகும்.

இதில் முத்தாய்ப்பாக கே.எல்.ராகுல் சதம்அடித்தன் மூலம், ஜாம்பவான் வீரேந்திர சேவாக்கின் சாதனையை முறியடித்துள்ளார். இந்திய தொடக்க வீரர்களில் வீரேந்திர சேவாக் ஆசியாவுக்கு வெளியே 4 சதங்கள் மட்டுமே அடித்துள்ள நிலையில் அதை முறியடித்த ராகுல் 5 சதங்களை அடித்துள்ளார்.

ஆசியாவுக்கு வெளியே தொடக்க வீரர்களில் அதிகமான சதம் அடித்த வகையில் சுனில் கவாஸ்கர் 15 சதங்கள் அடித்து முதலிடத்தில் உள்ளார். தொடக்க வீரர்களில் அதிகமான சதங்கள் அடித்தவரிசையில் கவாஸ்கருக்கு அடுத்தார்போல், 2-வது இடத்தில் ராகுல் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x