Published : 18 Dec 2021 12:15 PM
Last Updated : 18 Dec 2021 12:15 PM

ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி போட்டியில்: பாக்.கை வீழ்த்தியது இந்தியா

டாக்கா: வங்கதேசத்தின் டாக்கா நகரில் நடைபெற்று வரும் ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி தொடரில் இந்தியா தனது முதல் ஆட்டத்தை தென் கொரியாவிற்கு எதிராக 2-2 என்ற கோல் கணக்கில் டிரா செய்திருந்தது. 2-வது ஆட்டத்தில் வங்கதேசத்தை 9-0 என்ற கோல் கணக்கில் பந்தாடியிருந்தது.

இந்நிலையில் இந்திய அணி தனது 3-வது ஆட்டத்தில் பரமவைரியான பாகிஸ்தானை நேற்று எதிர்கொண்டது. இதில் இந்திய அணி 3-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. இந்திய அணியில் ஹர்மான்பிரீத் 2 கோல்களும் ஆகாஷ் தீப் சிங் ஒரு கோலும் அடித்தனர். இதில் ஹர்மான்பிரீத் பெனால்டி கார்னர் வாய்ப்புகளை கோல்களாக மாற்றினார். அதேவேளையில் ஆகாஷ்தீப் சிங் பீல்டு கோல் அடித்து அசத்தினார். இந்தத் தொடரில் 2 வெற்றி, ஒரு டிரா மூலம் 7 புள்ளிகளுடன் பட்டியலில் முதலிடத்தில் உள்ள இந்திய அணி கடைசி லீக் ஆட்டத்தில் நாளை ஜப்பானுடன் மோதுகிறது.-பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x