Published : 23 Mar 2016 09:27 AM
Last Updated : 23 Mar 2016 09:27 AM
மகளிர் டி 20 உலகக் கோப்பையில் பி பிரிவில் இடம் பெற்றுள்ள இந்திய அணி நேற்று தனது 3வது ஆட்டத்தில் இங்கிலாந்தை எதிர்கொண்டது. தர்மசாலாவில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த இந்திய அணி 8 விக்கெட் இழப்புக்கு 90 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக ஹர்மான்பிரித் கவுர் 26 ரன்கள் எடுத்தார். மிதாலி ராஜ் 20, பாட்டீல் 13, பாண்டே 12, மந்தனா 12, வேதா கிருஷ்ணமூர்த்தி 2, கோஸ்வாமி 2 ரன்கள் சேர்த்தனர். இங்கிலாந்து தரப்பில் நைட் 3 விக்கெட் வீழ்த்தினார்.
91 ரன்கள் இலக்குடன் விளையாடிய இங்கிலாந்து அணி 19 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 92 ரன்கள் எடுத்து 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பி அமவுன்ட் 20, ஷைவெர் 19, டெய்லர் 16 ரன்கள் எடுத்தனர். இங்கிலாந்து அணிக்கு இது 2வது வெற்றியாகும்.
அதேவேளையில் இந்தியா தொடர்ச்சியாக 2வது தோல்வியை சந்தித்தது. முதல் ஆட்டத்தில் வங்கதேசத்தை வீழ்த்திய இந்திய அணி அடுத்த ஆட்டத்தில் பாகிஸ்தானிடம் தோல்வியை சந்தித்தது. இரு தோல்வி களால் இந்திய அணி அரையிறுதிக்கு முன்னேறுவதில் சிக்கல் எழுந்துள்ளது.
கடைசி ஆட்டத்தில் இந்திய அணி வரும் 27ம் தேதி மேற்கிந்தியத் தீவுகள் அணியை எதிர்கொள்கிறது. இதில் இந்தியா வெற்றி பெறும் பட்சத்தில் மற்ற அணிகளின் வெற்றி, தோல்வியை வைத்து இந்திய அணியின் அரையிறுதி வாய்ப்பு முடிவாகும்.
இன்றைய ஆட்டம்
தென் ஆப்பிரிக்கா-அயர்லாந்து
இடம்: சென்னை
நேரம்: இரவு 7.30
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT