Published : 10 Nov 2021 07:53 AM
Last Updated : 10 Nov 2021 07:53 AM

நியூஸிலாந்து தொடர்: இந்திய அணி அறிவிப்பு; திட்டமிடல் இல்லாமல் தேர்வு: உம்ரான், வெங்கடேஷ்க்கு வாய்ப்பு

இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ள ஆல்ரவுண்டர் வெங்கடேஷ் அய்யர் | கோப்புப்படம்

மும்பை


நியூஸிலாந்துக்கு எதிராக நடக்கும் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடருக்கான இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது. விராட் கோலி கேப்டன் பதவியிலிருந்து விலகியதையடுத்துஅவருக்குப் பதிலாக ரோஹித் சர்மா கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்தத் தொடரில் டி20 உலகக் கோப்பைப் போட்டியில் விளையாடிய பல வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டு இளம் வீரர்களுக்கு வாயப்பளிக்கப்பட்டுள்ளது. விராட் கோலி, ரவி சாஸ்திரி இருவருமே இந்திய அணிக்கு அடுத்ததாகபொருத்தமான கேப்டனாக ரோஹித் சர்மா இருப்பார் என்று சுட்டிக்காட்டினர்.

இதனால் வேறு வழியின்றிகூட ரோஹித் சர்மா டி20 கேப்டனாக நியமிக்கப்பட்டிருக்கலாம், ஆனால், நீண்டகாலத்தில் ரோஹித் சர்மாதான் கேப்டனாக இருப்பார் என்பதற்கான உறுதியும் இல்லை.

புதிய பயிற்சியாளராக ராகுல் திராவிட், துணைப்பயிற்சியாளர்கள், பந்துவீச்சுப்பயிற்சியாளர், பீல்டிங் பயிற்சியாளர் புதிதாக வரும்போது, நீண்டகால நோக்கில், அடுத்துவரும் ஆஸ்திரேலிய டி20 உலகக்கோப்பையை கருத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் எனத் தெரிகிறது.

டி20 உலகக் கோப்பைப் போட்டி முடிந்தவுடன் இந்தியா வரும் நியூஸிலாந்து அணி 17ம் தேதி முதல் டி20 தொடர் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளது. இதில் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடருக்கான அணி மட்டும் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த டி20 தொடருக்கு இந்திய அணியின் கேப்டனாக ரோஹித் சர்மாவும், துணைக் கேப்டனாக கே.எல்.ராகுலும் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

டி20 உலகக் கோப்பைப்போட்டி, ஐபிஎல் தொடர் ஆகியவற்றை கருத்தில் கொண்டு விராட் கோலி, ஜஸ்பிரித் பும்ரா, ரவிந்திர ஜடேஜா, முகமது ஷமி ஆகியோருக்கு இந்தத் தொடரில் ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. இந்த 4 பேரும் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரிலிருந்து தொடர்ச்சியாக ஓய்வின்றி விளையாடி வருவதால் ஓய்வு வழங்கப்பட்டுள்ளது. அதேபோல உடற்தகுதியின்றி கஷ்டப்படும் ஹர்திக் பாண்டியா, ஷர்துல் தாக்கூருக்கும்கூட ஓய்வு வழங்கப்பட்டுள்ளது.

டி20 உலகக் கோப்பையிலும், இங்கிலாந்து தொடரிலும் இருந்த ரோஹித் சர்மா, ரிஷப் பந்த், ரவிச்சந்திர அஸ்வின், சூர்யகுமார் யாதவ், ஆகியோர் நியூஸிலாந்து தொடரில் சேர்க்க்பட்டுள்ளனர்.

இவர்கள் தவிர ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணியின் தொடக்க வீரராக சிறப்பாக் செயல்பட்ட ருதுராஜ் கெய்க்வாட், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் கலக்கிய ஆல்ரவுண்டர் வெங்கடேஷ் அய்யர், பந்துவீச்சாளர்கள் ஹர்ஸல் படேல், ஆவேஷ் கான் ஆகியோர் இந்திய அணியில் அறிமுகமாகின்றனர்.
டி20 உலகக் கோப்பைப் போட்டியில் வாய்ப்புப் பெறாத சுழற்பந்துவீச்சாளர் யஜுவேந்திர சஹல் அணியில் சேர்்க்கப்பட்டுள்ளார். ஆனால், ராகுல் சஹர், டி20 உலகக் கோப்பையில் இடம்பெற்ற மிஸ்ட்டிரி ஸ்பின்னர் வருண் சக்ரவர்த்தி ஆகியோர் சேர்்க்கப்படவில்லை.

உலகக் கோப்பைப் போட்டியில் அணியில் இருந்தும் வாய்ப்புப் பெறாத ஸ்ரேயாஸ் அய்யர், பந்துவீச்சு ஆல்ரவுண்டர் அக்ஸர் படேல் ஆகியோர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இந்திய அணி ேதர்வு செய்யப்பட்டவிதமே குழப்பமாக நீண்டகாலக் கண்ணோட்டத்தில் இல்லாமல் இருக்கிறது. தொடக்க வீரர்கள் மட்டும் 5 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். ரோஹித் சர்மா, கேஎல் ராகுல், வெங்கடேஷ் அய்யர், இஷான் கிஷன், கெய்க்வாட் என 5 வீரர்கள் இருக்கிறார்கள்.

நடுவரிசையை பலப்படுத்த எந்த வீரர்களைப் பயன்படுத்தப் போகிறார்கள், அதற்கு எந்த வீரரைத் தயார்படுத்தப் போகிறார்கள் என்ற திட்டமிடல் இல்லாமலேயே வீரர்கள் தேர்வு இருக்கிறது.
அணியில் இரு விக்கெட் கீப்பர்களுக்குப்பதிலாக ராகுல், இஷான் கிஷன், ரிஷப் பந்த் என 3 விக்ெகட்கீப்பர்கள் தேவையில்லாதது.இந்தத் தொடருக்கு ரிஷப்பந்துக்கு ஓய்வு அளித்துவிட்டு, கூடுதலாக இடதுகை வேகப்பந்துவீச்சாளர் யாரேனும் எடுத்திருக்கலாம்.

வேகப்பந்துவீச்சில் முகமது சிராஜ், ஹர்சல் படேல், ஆவேஷ் கான், தீபக் சஹர் என 4 வேகப்பந்துவீச்சாளர்கள் இடம் பெற்றாலும் இடதுகை வேகப்பந்துவீச்சாளர்கள் இல்லாமல் களமிறங்குகிறது இந்திய அணி. இங்கிலாந்து தொடருக்குப்பின் தமிழகவீரர் நடராஜனுக்கு வாய்ப்பு வழங்கப்படாத நிலையில் அவரை பரிசிலீத்திருக்கலாம்.

ஐபிஎல் டி20 தொடரிலிருந்து பந்துவீச்சில் ஃபார்மில் இல்லாத புவனேஷ்வர் குமாருக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டது ஏனோ எனத் தெரியவி்ல்லை. இளம் வீரர்களை எடுத்து தயார்படுத்த வேண்டும் என்ற திட்டமிட்டு, ஃபார்மில் இல்லாத வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். சுழற்பந்துவீச்சுக்கு அஸ்வின், அக்ஸர் படேல், யஜுவேந்திர சஹல் ஆகிய 3 சுழற்பந்துவீச்சாளர்கள் உள்ளனர்.

இந்திய அணி விவரம்:

ரோஹித் சர்மா(கேப்டன்), கேஎல் ராகுல்(துணைக் கேப்டன்), ஸ்ரேயாஸ் அய்யர், புவனேஷ்வர் குமார், ரிஷப்பந்த், இஷான் கிஷன், ரவிச்சந்திர அஸ்வின், யஜுவேந்திர சஹல், அக்ஸர் படேல், ஆவேஷ்கான், தீபக் சஹர், ஹர்சல் படேல், ருதுராஜ் கெய்க்வாட், வெங்கடேஷ் அய்யர்,முகமது சிராஜ், சூர்யகுமார் யாதவ்.

அதுமட்டுல்லாமல் தென் ஆப்பிரிக்கா செல்லும் இந்திய ஏ அணியும் அறிவிக்கப்பட்டுள்ளது. 4 நாட்கள் வரை நடக்கும் 3போட்டிகள் வரும் 23ம் தேதி தொடங்குகிறது. இதில் பிரித்வி ஷா, வேகப்பந்துவீச்சாளர் உம்ரான் மாலிக் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இந்திய ஏ அணி விவரம்:

பிரியங்க் பஞ்சல்(கேப்டன்), பிரித்வி ஷா, அபிமன்யு ஈஸ்வரன், தேவ்தத் படிக்கல், சர்பிராஸ் கான், பாபா அபராஜித், உபேந்திர யாதவ், கிருஷ்ணப்பா கவுதம், ராகுல் சஹர், சவுரவ் குமார், நவ்தீப் ஷைனி, உம்ரான் மாலிக், இஷான் போரல், அர்ஜான் நாகஸ்வாலா

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x