Published : 07 Mar 2016 09:57 AM
Last Updated : 07 Mar 2016 09:57 AM
லிகா கால்பந்து போட்டியில் செல்டா விகோ அணிக்கு எதிரான ஆட்டத்தில் கிறிஸ்டியானா ரொனால்டோ 4 கோல்களை அடித் தார். இதன்மூலம் இப்போட்டியில் ரியல் மேட்ரிட் அணி 7-1 என்ற கோல்கணக்கில் அபாரமாக வென்றது.
லா லிகா கால்பந்து தொடரில் ரியல் மேட்ரிட் அணிக்கும் செல்டா விகோ அணிக்கும் இடையிலான ஆட்டம் நேற்று முன்தினம் நடந்தது. இந்த ஆட்டத்தின் இரண் டாவது பாதியில் கிறிஸ்டியானா ரொனால்டோ அடுத்தடுத்து 4 கோல்களை அடித்தார். அவரது ஆவேசமான ஆட்டத்தால் இப்போட்டியில் ரியல் மேட்ரிட் அணி 7-1 என்ற கோல்கணக்கில் வென்றது. இந்த வெற்றியைத் தொடர்ந்து புள்ளிகள் பட்டியலில் ரியல் மேட்ரிட் அணி 3வது இடத்தில் நீடிக்கிறது.
இதன்மூலம் லா லிகா தொடரில் அவர் அடித்துள்ள கோல்களின் எண்ணிக்கை 252-ஆக உயர்ந்துள்ளது. இதைத் தொடர்ந்து இந்த தொடரில் அதிக கோல்களை அடித்துள்ள இரண்டாவது வீரர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார். 305 கோல்களை அடித்துள்ள மெஸ்ஸி, இந்த பட்டியலில் முதல் இடத்தில் இருக்கிறார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT