அரையிறுதிக்கு முன்னேறும் முனைப்பில் மேற்கிந்தியத் தீவுகள்

அரையிறுதிக்கு முன்னேறும் முனைப்பில் மேற்கிந்தியத் தீவுகள்
Updated on
1 min read

டி 20 உலகக் கோப்பையில் குரூப் 1-ல் இடம் பெற்றுள்ள தென் ஆப்பிரிக்கா-மேற்கிந்தியத் தீவுகள் இன்று மோதுகின்றன. இந்த ஆட்டம் இரவு 7.30 மணிக்கு நாக்பூரில் நடைபெறுகிறது.

மேற்கிந்தியத் தீவுகள் அணி முதல் ஆட்டத்தில் இங்கிலாந் தையும், இரண்டாவது ஆட்டத் தில் நடப்பு சாம்பியனான இலங்கையையும் தோற்கடித்தது. இன்றைய ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தும் பட்சத்தில் குரூப் 1-ல் இருந்து முதல் அணியாக அரையிறுதியில் கால்பதிக்கும்.

தென் ஆப்பிரிக்க அணி 2 போட்டிகளில் விளையாடி தலா ஒரு வெற்றி, ஒரு தோல்வி கண்டுள்ளது. அரையிறுதிக்கு முன்னேற வேண்டுமானால் இன்றைய ஆட்டத்திலும், கடைசி ஆட்டத்திலும் வென்றாக வேண்டும் என்ற நெருக்கடியில் உள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in